Thursday, December 17, 2009

ஒரே சொடுக்கில் கணினியை Restart செய்ய..


Start மெனுவில் சென்று உங்கள் கணினியை Restart செய்வது தாமதமான
செயலாக இருக்கிறதா ? நீங்கள் விரும்பினால் ஒரே சொடுக்கில் கணினியை Restart செய்ய வைக்கலாம். அது மட்டும் இன்றி எவ்வளவு நேரம் கழித்து Restart ஆகவேண்டும் என்றும் தீர்மானிக்கலாம். அரை நிமிடம் அல்லது ஒரு நிமிடம் என்று அமைத்துக்கொள்ளலாம். இதனால் உங்களின் வேலையும் எளிதாகிறது. நேரமும் குறைகிறது. மின்சார செலவும் குறைய வாய்ப்பல்லவா ? இதை நீங்கள் இயக்கியவுடன் உங்களின் அனைத்து பயன்பாடுகளையும் தானாகவே மூடிவிட்டு Restart செய்கிறது. அனால் எல்லாவற்றையும் முன்பே நீங்கள் சேமித்து கொள்ள வேண்டும்.இந்த வேலையை செய்யுமாறு ஒரு Shortcut iconஉருவாக்குவது எப்படி மட்டும் பார்ப்போம்.


1.உங்கள் கணினியின் டெஸ்க்டாப்பில் வலது கிளிக் செய்து வரும் பட்டியில்
New -> Shortcut Icon என்பதை தேர்வு செய்யுங்கள்.


2. அடுத்தது குறுக்கு விசைக்கான இடத்தை கேட்கும். ( Location ). அதில் கீழ்க்கண்ட வரியை அடிக்கவும்.
shutdown -r -t 30 
(இதில் 30 என்பது விநாடிகளை குறிக்கிறது. உங்களுக்கு ஒரு நிமிடம் கழித்து ஆக
வேண்டும் எனில் 60 என்று கொடுக்கவும். )

3. அடுத்து குறுக்கு விசைக்கான ( Shortcut icon ) பெயரை தரவும். உதாரணமாக
Restart என்று கொடுத்துவிட்டு முடித்து விடுங்கள்.

4. இப்போது நீங்கள் இந்த Shortcut icon ஐ கிளிக் செய்தால் உங்களுக்கு ஒரு
விண்டோஸ் உதவிப்பெட்டி தோன்றி அனைத்தையும் சேமியுங்கள் என்று எச்சரிக்கை செய்தியை அளிக்கும். நீங்கள் குறிப்பிட்ட நேரம் முடிந்தவுடன் தானாக Restart ஆகிவிடும்.

5. சரி நீங்கள் தவறாக Restart கொடுத்துவிட்டீர்கள். இதை எப்படி தடுப்பது என்று நினைத்தால்,
Start -> Run சென்று shutdown -a என்று அடித்தால் போதும். உங்கள் கணினி Restart ஆவது தடுக்கப்படும். www.ambaisuresh.blogspot.com

ஹார்ட் டிஸ்கில் உள்ள கோப்புகளை நிரந்தரமாக அழிப்பது எப்படி?

உங்கள் கணினியை வேறு எவருக்கேனும் விற்பனை செய்யும் போது கணினியில் உள்ள கோப்புகளை சுத்தமாக அழித்து விட்டு கொடுப்பீர்கள். அழிக்கும் போது Shift + Delete பயன்படுத்தினால் சுத்தமாக அழிந்துவிடும் என்று நினைத்து அழிப்பார்கள்.

ஆனால் இப்போது மீட்டு எடுக்கும் மென்பொருள்கள் கொண்டு (Recovery Software ) அழித்த கோப்புகளை திருடி அடுத்தவரின் அந்தரங்கத்தை மேய்வதில் நிறைய பேருக்கு விருப்பம். அதனால் கோப்புகளை அழிக்கும் போது அல்லது ஹார்ட் டிஸ்கை Format செய்ய வேண்டும் என்று நினைத்தால் உங்களுக்கு இந்த இரண்டு மென்பொருள்கள் உதவும். இந்த மென்பொருள்களை கொண்டு அழிக்கும் போது மறுபடியும் கோப்புகள் கிடைக்காதவாறு துடைத்து விடும்.

1.Eraser


தரவிறக்கச்சுட்டி :
http://sourceforge.net/projects/eraser/files/Eraser/Eraser-5.8.7_setup.exe/download

கணினியில் உட்காரும் போது சில யோசனைகள்

நாள் தோறும் கணினியில் பணிபுரிபவர்கள் சில விசயங்களை
கவனிப்பதில்லை. விசைப்பலகை மற்றும் மவுஸ் எப்படி
உபயோகப்படுத்தவேண்டும் என்றும் தெரிவதில்லை.
இதை சாதாரணமாக நினைத்தால் பின்னாளில் பெரிய
ஆபத்தில் கொண்டு போய் விட்டு விடும். கார்பல் டன்னல்சிண்ட்ரோம் (Carpal tunnel Syndrome) என்ற நோய் இதனால்
ஏற்படுகிறது தெரியுமா? இந்த நோய் வந்தவர்களுக்கு செய்யப்படும்
சிகிச்சை பற்றிய படங்களை கீழே பாருங்கள்







தவறாக பயன்படுத்துவதும் சரியாக பயன்படுத்துவதும்












இந்த நோய் வராமல் தடுப்பதற்கான பயிற்சிகள்:





இதைப்பற்றிய சில காணொளிகள்:

http://www.youtube.com/watch?v=XCcplgeQzrU

http://www.youtube.com/watch?v=ஹுய்ம்ன்ய்ரோத்ஜ்

மேலும் இதைப்பற்றி கார்த்திக்கின் ஒரு கட்டுரை
http://honey-tamil.blogspot.com/2009/03/udkaarum.html

Win XP – இணைய இணைப்பின் வேகத்தை அதிகப்படுத்துவது எப்படி


Win XP – இணைய இணைப்பின் வேகத்தை அதிகப்படுத்துவது எப்படி ?

உங்களிடம் இருப்பது விண்டோஸ் XP எனில் இந்த முறையைப்பின்பற்றி உங்களின் இனைய இணைப்பின் வேகத்தை சிறிது அதிகரித்துக் கொள்ளலாம்.  முயன்று பார்த்து வித்தியாசமாகவிருந்தால் பின்னூட்டத்தில் சொல்லுங்க நண்பர்களே.
முதலில் அட்மினிஸ்ரேட்டர் அக்கவுண்ட் அல்லது அட்மினிஸ்ரேட்டருக்குரிய உரிமைகளனைத்துமிருக்கும் அக்கவுண்டில் நீங்க இருக்க வேண்டும்.
1. 1. Start – Run – type gpedit.msc
1
2. இடது பக்கத்தில் உள்ள Local Computer Policy என்பதை விரிவாக்கி கீழ்க்கண்ட ஒழுங்கில் செல்லவும்.
Administrative Templates / Network Branch வரை சென்று அங்கு QoS Packet Scheduler என்பதனை தெரிவு செய்யவும்.
3. பின்னர் வலது பக்கம் வரும் Limit reservable bandwidth என்பதனை இரட்டைச்சொடுக்கு மூலம் திறக்கவும்.
21
4. Setting tab இனில் Enable என்பதனை தெரிவு செய்யவும்.
5. Bandwidth limit % எனுமிடத்தில் 0 ( பூச்சியம்) என இட்டு OK பட்டனை அழுத்தவும்.
3
அவ்வளவுதான்.
XP யானது சாதாரணமாகவே இணைய இணைப்பில் சுமார் 20% இனை தனது தேவைக்கு ஒதுக்கி விடும்.  QoSஇனை disable பண்ணியிருந்தாலும் இப்படித்தான் இருக்கும். QoS ஆனது நமது வீட்டுப்பாவனைக்கு  தேவையில்லாத ஒன்று. QoS பயன்படுத்தவில்லையெனில் XP யானது ஒதுக்கி வைத்த 20% த்தினை நாமாவது பயன்படுத்தலாம். அதற்குத்தான் இந்தப்பதிவு.  ஆனால் உங்களிடம் அதிவேக இணைய இணைப்பிருந்தால் இந்தப்பதிவில் சொல்லியபடி செய்தாலும் எந்த வித்தியாசமும் தெரியாது. டயல் அப் கனக்ஷன் வைத்திருப்பவர்களுக்கு வேகம் அதிகரிக்கும்.
உங்களுக்கும் வித்தியசம் தெரிகிறதாவென பின்னூட்டத்தில் சொல்லுங்க…

Thursday, October 15, 2009

உற்சாகமே உயிர்

உற்சாகம் என்னும் ஊக்கி

வெற்றிகரமான மனிதர்களின் செயல்களைக் கவனித்துப் பார்த்தால் ஒரு முக்கிய விஷயம் புலப்படும். அவர்களது திடமான குறிக்கோளை செயல்களாக மாற்றுவது ஒரு ஊக்கியாக இருக்கும்.

அந்த ஊக்கிதான் உற்சாகம். உற்சாகமே அவர்களது உயிர்.


கடவுள் மயம்

உற்சாகம் என்பதை ஆங்கிலத்தில் ENTHUSIASM என்கிறோம்.

ENTHUSIASM என்ற ஆங்கில வார்த்தை ENTHEOS என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து பிறந்தது. இதன் பொருள் கடவுள் உன்னுடன் இருக்கிறார் அல்லது 'கடவுள் மயம்' என்பதாகும்.

ஆகவே 'உற்சாகத்துடன் இயங்குகிறார்கள் வெற்றியாளர்கள்' என்று சொல்லும்போது கடவுளே அவர்களுக்கு தைரியம், செயல்படும் உத்தி, ஞானம் இன்னும் அனைத்தையும் தருகிறார் என்று ஆகிறது.

சாதனையாளர்கள் அனைவரையும் இந்த உற்சாகம் 'கள்வெறி' போன்ற போதையைத் தந்து அவர்களைக் குறிக்கோளை நோக்கி இட்டுச் செல்கிறது.

'உற்சாகத்தை நினையுங்கள், உற்சாகம் பற்றிப் பேசுங்கள், உற்சாகமாகச் செயல்படுங்கள்'. நீங்கள் உற்சாக புருஷராகவே ஆகிவிடுவீர்கள்.

வாழ்வில் ஒரு புதிய மலர்ச்சி, அழுத்தமான ஈடுபாடு, மகத்தான அர்த்தம் தென்படும்.

நீங்கள் விரும்பினால் சோம்பலை நினைத்து, பேசி, சோம்பேறியாகி துயரத்துடன் ஆழ் இருளில் இருக்கவும் இருக்கலாம். இல்லை, அதே முறையில் ஊக்கம் உற்சாகம் பெற்று மகிழ்ச்சி ஊற்று ததும்பி வழியும் புது வாழ்வையும் அமைத்துக் கொள்ளலாம்

நார்மன் வின்சென்ட் பீல் டிக்கன்ஸின் வெற்றி

பிரபல ஆங்கில நாவலாசிரியரான சார்லஸ் டிக்கன்ஸ் தனது கதையில் வரும் நாயக, நாயகியர் இதர கதாபாத்திரங்கள் அனைவரும் தம்மைப் பிடித்து ஆட்டுவதாகவும் விரட்டுவதாகவும் கூறுவார். அவர்களைப் பேப்பரில் உரிய முறையில் ‘இறக்கி வைக்கும் வரை’ அந்தப் பாத்திரங்கள் அவரை விட மாட்டார்களாம். ஒருமுறை, ஒரு மாதம் வரை தன் அறையிலே அடைப்படுக் கிடந்து பிறகு வெளியே வந்தபோது கொலையாளி போலத் தெரிந்தாராம். அவரது பாத்திரங்கள் அவரை அப்படி ஆக்கிவிட்டிருந்தன!

உலகில் சரித்திர முக்கியத்துவம் பெறும் பெரிய தருணங்கள் உற்சாகத்தின் வெற்றியையே அறிவிக்கிறது என்கிறார் எமர்ஸன்.

நெப்போலியன் உற்சாகம்

ஒரு வருடத்தில் முடிக்கும் போரை நெப்போலியன் இரண்டே வாரத்தில் முடித்துவிட்டான் என்றால் அதன் மூல காரணம் அவனது உற்சாகம்தான்!

"பிரெஞ்சு வீரர்கள் ஆண்மையாளர்கள் அல்ல; அவர்கள் பறந்தோடிவிடுவர்" என்றனர் ஆஸ்திரியர்கள்.

இத்தாலிப் படையெடுப்பில் முதல் பதினைந்தே நாட்களில் ஆறு பெரும் வெற்றிகளை அடைந்து 1500 பேரை சிறைக் கைதிகளாக்கி மாபெரும் வெற்றி பெற்றான் அவன்.

நெப்போலியனைப் பார்த்த ஆஸ்திரிய ஜெனரல் வியந்து கூவினான். "இந்த இளம் தலைவனுக்குப் போர்க்கலை என்றால் என்னவென்றே தெரியாது" என்று.

ஆனாலும் அந்தக் குள்ளமான தலைவனைப் பின்பற்றி உற்சாகத்துடன் நடைபோட்ட வீரருக்குத் தோல்வியும் தெரியவில்லை; இருளடைந்த எதிர்காலமும் இல்லை!

மைக்கேல் ஏஞ்சலோவின் ஓவியம்

மைக்கேல் ஏஞ்சலோ ஓவியம் வரைவதற்கு முன்னால் 12 வருட காலம் உடலியலைப் (ANATOMY) படித்தார். இதுவே அவரது ஓவியப் படைப்பை உயிருள்ளதாக்கியது. உடல் எலும்பு அமைப்பு, உடல் தசை, சதை, தோல் எனப் படிப்படியாக தனது படைப்புகளை உருவாக்க அவரது அடிப்படை உற்சாகமே காரணம். தனது வண்ணங்களைத் தாமே கலப்பது அவர் வழக்கம். வேலையாட்களையோ, தமது மாணாக்கர்களையோ வண்ணங்களைத் தொடக்கூட அவர் அனுமதிக்கவில்லை.

மொசார்ட்டிடம் கேட்ட கேள்வி

இசை அமைக்க விரும்பிய ஒரு 12 வயதுச் சிறுவன், மேதை மொசார்ட்டை அணுகி, "ஐயா! இசை அமைக்க விரும்புகிறேன். எப்படி ஆரம்பிப்பது?" என்று கேட்டான்.

"இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்" என்றார் மொசார்ட்.

"ஆனால் நீங்கள் என்னைவிட இளம் வயதில் ஆரம்பித்து விட்டீர்களே?" என்றான் அந்தச் சிறுவன்.

"ஆம், உண்மைதான்! ஆனால் உன்னைப்போல் யாரையும் அணுகி எப்படி ஆரம்பிப்பது என்று நான் கேட்கவில்லையே. இசை அமைக்க ஊக்கமும், உற்சாகமும் வந்தவுடன் அமைக்க வேண்டியதுதான்" என்றார் மொசார்ட்.

இளமை உற்சாகம்

இளமையில் உற்சாகத் துள்ளல் அதிகம் இருக்கும். இளம் வயதிலேயே அலெக்ஸாண்டர் உலகை வென்றான். நெப்போலியன் 25-ம் வயதிலேயே இத்தாலியை வெற்றி கொண்டான். பைரன் 37 வயதிலேயே புகழேணியில் இறந்தார். பாரதியார் 39 வயதில் அருட்கவியைக் கொட்டி தேசத்தைத் தட்டி எழுப்பி புகழுடம்பு எய்தினார். 39 வருடங்கள் வாழ்ந்தே உறக்கத்தில் ஆழ்ந்திருந்த பாரதத்தை ஆன்மீக விழிப்படையச் செய்தார் சுவாமி விவேகானந்தர். ஆறு மதங்களை நிறுவி இந்து மதத்தை புனருத்தாரணம் செய்ய பாரதமெங்கும் கால்நடையாகவே சென்று நான்கு இடங்களில் மடங்களை நிறுவி உலகின் குருவாக - ஜகத் குருவாக 33 வயதிலேயே திகழ்ந்தார் ஜகத்குரு சங்கரர்.


முதுமையிலும் உற்சாகம்

இளமையில் உற்சாகம் இயல்பே என்றால், முதுமையிலும் விடாப்பிடியாக அதைப் பிடித்தால் எப்படி இருக்கும்? வயதான ஹோமர் படைத்த உலக மகா காவியம் தான் ஓடிஸி.

'கவிஞர்களின் வாழ்க்கை வரலாறு' என்ற புத்தகத்தை டாக்டர் ஜான்சன் எழுதும்போது அவருக்கு வயது 71.

ராபின்சன் குரூஸோ எனும் உலகப் புகழ்பெற்ற நாவலை வெளியிடும்போது (DEFOE) டீபோவின் வயது 58. தனது "பிரின்சிபியா" என்ற நூலுக்கு விளக்கவுரை அளித்தார் நியூட்டன் தனது 83-ம் வயதில்.

ஆங்கில அகராதியைத் தொகுத்த வெப்ஸ்டர் ஐம்பது வயதிற்குப் பின்னர் 17 மொழிகளைக் கற்றார்.


பிராங்க் பெட்கரின் வெற்றி

பிராங்க் பெட்கர் உலகின் புகழ் பெற்ற சேல்ஸ்மேன் நம்பர் ஒன். அவர் ஆரம்பத்தில் பேஸ்பால் விளையாடுபவராக இருந்தார். எல்லாத் திறமைகளும் இருந்தும் கூட அவரை டீமிலிருந்து விலக்கி விட்டனர் - அவரிடம் உற்சாகம் இல்லை என்ற ஒரு காரணத்தால்.

அதே துறையில் வல்லுநரான ஒருவர் அவரிடம் அக்கறை கொண்டு, "பிராங்க் உன்னிடம் உற்சாகம் வேண்டும். வெற்றிக்கு அதுவே அடிப்படைத் தேவை" என்றார்.

"நான் என்ன செய்வது? அது என்னிடம் இல்லையே! கடையிலா வாங்க முடியும் அதை? என்னிடம் இல்லை என்றால் அது இல்லைதானே?" என்றார் பிராங்க்.

"அப்படி இல்லை பிராங்க், உற்சாகமுள்ளவனாக உன்னை ஆக்கிக் கொள். உற்சாகமுடன் விளையாடு. உற்சாகமுடன் இருப்பதுபோல் நட, விளையாடு. உற்சாகம் தானாக உன்னை வந்து அடையும். உறுதியான முனைப்புடன், உற்சாகத்துடன் நீ விளையாடினால் உனது இயல்பான திறமைகள் உன்னை சிகரத்தில் ஏற்றிவிடும்" என்றார் அவர்.

அப்படியே நடந்தது. பேஸ்பாலில் மட்டும் வெற்றி பெறவில்லை பிராங்க். பின்னர் சேல்ஸ்மேனாக ஆகி, உலகின் நம்பர் ஒன் சேல்ஸ்மேனாக உயர்ந்தார்.

உலகின் தலைசிறந்த சேல்ஸ்மேனாகத் தான் ஆனதற்கான காரணம் உற்சாகம் என்கிறார் பிராங்க் பெட்கர்.

"HOW I RAISED MYSELF FROM FAILURE TO SUCCESS IN SELLING" என்ற அவரது புத்தகம் படிப்பதற்குரியது.


இருப்பது போல

"இருப்பது போல" (AS IF) என்னும் இயற்கை விதி ஒன்று உண்டு.

உங்களிடம் இல்லாவிட்டாலும் கூட தேவையான குணம் இருப்பது போல நீங்கள் நடக்க ஆரம்பித்தால் நீங்கள் விரும்பும் குணம் தாமாக உங்களை வந்தடையும்.

ஜலதோஷம் போல எளிதில் தொற்றிக் கொள்ளக் கூடியது உற்சாகம். ஆனால் ஜலதோஷம் போலக் கெடுதலைச் செய்யாமல் நல்லதைச் செய்கிறது என்கிறார் நார்மன் வின்சென்ட் பீல்.

உற்சாகம் இருப்பது போலச் செயல்படுங்கள். தானே உற்சாகம் வந்து சேரும்.


தோரோ காட்டும் வழி

அமெரிக்கா தத்துவஞானி தோரோ காலை துயிலெழும் போது படுக்கையில் ஒரு 5 நிமிடம் இருந்தவாறே தன்னிடம் உள்ள நல்ல அம்சங்களை எல்லாம் எண்ணிப் பார்ப்பார். ஆரோக்கியமான உடல், விழிப்பான மனம், வேலையில் ஆர்வம், பிரகாசமான எதிர்காலம் தன்னை நம்பி உள்ள மக்கள்-இவற்றை எண்ணிப் பார்த்து இந்த "நல்ல செய்திகளை" முதலில் மனதில் போட்டு எழுந்திருப்பார். இந்த உத்தியைக் கடைப்பிடிப்பதால் வெளி உலகம் தரும் கெட்ட செய்திகள் அவரைப் பாதிக்காத அளவில் அவரது மனம் பண்பட்டது. ஆனால், நாளடைவில் நல்ல செய்திகள் மட்டுமே நிறைந்த நாட்களே அவருக்கு உருவாகத் தொடங்கின.


கெட்டவற்றைத் தூக்கி எறியுங்கள்

உற்சாகம் எப்போதும் தவழ ஒரு சிறிய உத்தி உண்டு. மனசாளரத்தைத் திறந்து கெட்ட எண்ணங்களை, கெட்ட செய்திகளை, கெட்டவை அனைத்தையும் ஒவ்வொன்றாகத் தூக்கி எறிவதுதான் அது.

சஞ்சலம் மிக்க சம்பவங்கள், தூக்கி எறிந்து பேசப்பட்ட வினாடிகள், துயரமான வார்த்தைகள், மனதை நோகச் செய்யும் செயல்கள், சிந்தனைகள் இவற்றால் நல்ல "மூடை" இழந்து எல்லாமே பாழாகிவிட்டது போல வரும் உணர்ச்சியை மாற்ற வல்லது இந்த உத்தி.

அமைதியான ஒரு இடத்தில் அமர்ந்தோ, படுத்தோ அன்று நடந்த ஒவ்வொரு உற்சாகமற்ற, வெறுப்பூட்டும் செயலை, சிந்தனையை "சம்பவத்தை மனதிலிருந்து எடுத்து, வெளியே போடுவது போல" பாவனையுடன் நினையுங்கள்.

அந்தச் செயல்களுக்கும் உங்களுக்கும் இனி சம்பந்தம் இல்லை. இப்போது வெற்றிடமாக இருக்கும் உங்கள் மனதில் உங்களுக்குப் பிடித்த வெற்றிகரமான, உற்சாகமாக செய்திகளை, சிந்தனைகளை நிரப்பி "நாளை நமதே", "நாளை வெற்றி நிச்சயம்" என்ற உணர்வுடன் உறங்கச் செல்லுங்கள்.

இந்த உத்தி தரும் அமைதியும், ஆனந்தமும் அனுபவித்தால் மட்டுமே புரியும்.

உற்சாகம் என்ற எரிபொருள், ராக்கெட்டான உங்களை வெற்றி விண்வெளியில் ஏற்றிவிடும்.

எவ்வளோ பண்றோம்... இத பண்ண மாட்டோமா...’

எவ்வளோ பண்றோம்... இத பண்ண மாட்டோமா...’


என்று தமிழகத்தின் விடிவெள்ளி சொன்ன பொன்மொழி,

வாழ்க்கை வாழ்வதற்கான ஒரு உன்னத தத்துவம். எப்படி? இந்த தன்னம்பிக்கை கொடுக்கும் கதையை படிங்க... -----------------------------------------------------------------------------------------------------------------------------------





பில் கேட்ஸ், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முதன்மை செயலதிகாரியாக இருந்த நேரம். ஐரோப்பிய மைக்ரோசாப்டின் கிளைக்கு தலைமை அதிகாரியை நியமிக்க, ஒரு நேர்காணலை நடத்தி கொண்டிருந்தார்கள். கிட்டத்தட்ட ஐந்தாயிரம் பேர் வந்திருந்தார்கள். ஒரு பெரிய அறையில் எல்லோரும் குழுமியிருந்தார்கள். கருப்பு கோட், நீல சட்டை, புள்ளி போட்ட டையுடன் எல்லாவற்றையும் கவனித்தப்படி ஒரு

பக்கத்தில் உட்கார்ந்திருந்தார், நம்ம கந்தசாமி.

உள்ளே நுழைந்த பில் கேட்ஸ், 5000 பேர்களை பார்த்ததும் கொஞ்சம் அதிர்ந்து தான் போனார். வந்திருந்த அனைவருக்கும் வணக்கம் வைத்தார். பிறகு, நன்றி தெரிவித்தார். சிக்கீரம் முடிக்கணும், சிம்பிளா வைக்கணும்ன்னு முடிவு பண்ணினார்.

முதலில் தொழில்நுட்ப அறிவை சோதிக்க வேண்டும் என்று விரும்பி ஒரு கேள்வி கேட்க நினைத்தார். எப்படியும் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு, மைக்ரோசாப்ட் டெக்னாலஜி தெரிந்துதான் வந்திருப்பார்கள். அதனால், இப்படி கேட்டார். “உங்களில் யாருக்கெல்லாம் ஜாவா தெரியும்? தெரியாதவர்கள் மன்னிக்கவும். நீங்கள் கிளம்பலாம்.”

2000 பேர் இடத்தை காலி செய்தார்கள். நம்ம கந்தசாமிக்கும் ஜாவா தெரியாதுதான். இருந்தும் போகலையே! “இப்படியே இங்க இருந்தா, எதையும் இழக்க போறது இல்ல. எதுக்கு போய்கிட்டு? என்னத்தான் நடக்குது பார்ப்போம்” என்றபடி அங்கேயே இருந்து விட்டார்.

அடுத்த கேள்வி, “உங்களில் யாரெல்லாம் நூறு பேருக்கு மேல் ஆட்களை நிர்வகித்து இருக்கிறீர்கள்? அவர்கள் மட்டும் இருக்கலாம்.” இன்னொரு 2000 வெளியே கிளம்பியது. கந்தசாமி - “நான் ஒருத்தரைக்கூட நிர்வகித்தது கிடையாதே? என்ன செய்யலாம்? சரி, அடுத்த கேள்வியை கேட்கலாம்.”

இன்னும் ஆயிரம் பேர் இருக்கிறார்களா? என்று நினைத்துக்கொண்டு பில் கேட்ஸ் கேட்டார், “மேலாண்மை பட்டம் பெறாதவர்கள் தயவுசெய்து...”. சொல்லி முடிக்கும் முன்பே, 500 இருக்கைகள் காற்று வாங்கியது. ”அதையெல்லாம் படிக்க நமக்கு எங்க நேரம் இருந்தது?” பெருமூச்சுவிட்டபடி பில் கேட்ஸையே பார்த்து கொண்டிருந்தார், கந்தசாமி.

ஐரோப்பிய மொத்த கண்டத்திற்கு முழுமையான தலைமை பதவியாச்சே? கண்டம் முழுக்க சுற்ற வேண்டி இருக்குமே? எத்தனை மொழிகள் தெரிந்திருக்கும் என்று பார்ப்போம் என்று அடுத்த கேள்வியை கேட்டார். “உங்களில் யாருக்கெல்லாம் செர்போ-க்ரோட் மொழி தெரியும்?” - செர்போ-க்ரோட், உலகில் அரிதாக பேசப்படும் மொழி.

இப்ப, அரங்கில் இரண்டே பேர் இருந்தார்கள். அதில் ஒருவர் யாரென்று உங்களுக்கு தெரியும். அது, “எவ்வளவோ பண்ணிட்டோம். இத பண்ண மாட்டோமா?” என்ற நினைப்பில் நம்ம கந்தசாமி. ஆனாலும், மனசுக்குள் பயம்தான். மூன்று பேரும் ஒரு வட்ட டேபிளை சுற்றி உட்கார்ந்தார்கள். இருவரையும் பார்த்தார், பில் கேட்ஸ்.

டிக் டிக்... டிக் டிக்... டிக் டிக்... “ஏன்ப்பா, இப்படி பார்க்குற? சீக்கிரம் ஏதாவது கேளுப்பா... ” - மனசுக்குள் கந்தசாமி. ”இப்ப, நீங்க ரெண்டு பேர் தான் இந்த மொழி தெரிந்தவர்கள் இருக்குறீர்கள். செர்போ-க்ரோட் மொழியில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தை பற்றி, அதன் தொழில்நுட்ப திறன் பற்றி விவாதம் செய்யுங்க.”

கந்தசாமி அமைதியாக, பக்கத்தில் இருந்த இன்னொருத்தனை பார்த்தார். சின்ன வயசுக்காரன். நெஞ்சை நிமிர்த்திக்கிட்டு உட்கார்ந்திருந்தான். மூளைக்காரன் போல! கந்தசாமி ஆரம்பித்தார். மெதுவாக, ”தம்பிக்கு எந்த ஊரு?” - கேட்டது தமிழில்.

“தூத்துக்குடி பக்கம். நீங்க?

ithu eppadi iruuke?

Thursday, October 8, 2009

வாழ்வில் வெற்றி பெற - சுகி சிவம்.

முன்னேற விரும்புகிறவர்கள் ஒரு ரகசியத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். தங்கள் கருத்தை அநாவசியமாக எதிர்க்கிறவர்கள், கேலி பேசுகிறவர்களோடு வீணான விவாதம் செய்வதை தவிர்த்துவிட்டாலே வேகமாக முன்னேற முடியும் என்பதை வாழ்க்கையில் கற்றுக்கொள்ள வேண்டும்.




பெருவாரியான மக்கள் முன்னேற முடியாததற்கான காரணம் தங்களுடைய கருத்துக்கு எதிர்கருத்து பேசிக்கொண்டே இருக்கிறார்கள். இன்னொன்று அவர்களை ஏற்றுக்கொள்ளச் செய்யவேண்டும் என்று கஷ்டப்படுகிறார்கள்.





பெருவாரியான மனிதர்கள் மனைவியோடு சண்டை செய்வதில் காலத்தை செலவு செய்கிறார்கள். அதேபோல் பெண்கள் தங்களுடைய பிரச்சனைகளை கணவனோடு பேசுவதிலேயே தங்கள் வாழ்வின் பெரும்பகுதியை வீணாக்குகிறார்கள். எந்தக் காலத்திலும் மனைவியோடு சண்டை போட்டு ஜெயிக்க முடியாது.



எப்போதும் பெண் இதயத்திலிருந்து பேசிக்கொண்டிருக்கிறாள். எப்போதும் ஆண் மூளையிலிருந்து பேசிக்கொண்டிருக்கிறான். இதற்காக பெண்ணுக்கு மூளை இல்லை என்று சொல்வதாக அர்த்தமில்லை. அவள், பயன்படுத்துகிற சந்தர்ப்பம் வேறு. ஆனால் அவள் கணவனோடு விவாதம் செய்கிறபோது அவளுடைய இதயம் முன்னுக்கு வந்து விடுகிறது. கணவனுக்கு இதயத்தைவிட மூளை முன்னுக்கு வந்துவிடுகிறது.



வீட்டில் கவனித்துப்பாருங்கள். மனைவி சண்டைக்கு அல்லது விவாதத்திற்கு வரும்போது ஒரு விஷயத்தைத் தொடர்ந்து பேசமாட்டாள். ஏதாவது ஒரு விஷயத்திலிருந்து பல விஷயங்களுக்கு தாவிக்கொண்டே இருப்பாள். ஆண் அப்படி கிடையாது. ஒரே விஷயத்தை பிடியாய் பிடித்துக் கொண்டிருப்பான்.



ஆண் அறிவுப் பூர்வமாக, தர்க்க ரீதியாக ஒரு புள்ளியில் நிற்பான். பெண்ணால் அப்படி நிற்க முடியாது. தாண்டி தாண்டி போய்க் கொண்டேயிருப்பாள். அதற்கான காரணத்தை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஒவ்வொரு மனிதனுக்கும் மூளை இரண்டு பிரிவாக இருக்கிறது. வலது பக்க மூளை, இடது பக்க மூளைக்கும் இடையே செயல்திறனில் வேறுபாடு இருக்கிறது. வலது பக்கத்து மூளை கவித்துவமானது. தெய்வம் புராணத்தில் நம்பிக்கை உடையது. அது தவ்வி தவ்வி இயல்பாக செயல்படக்கூடியது. வலது மூளை உணர்ச்சி வசப்படக்கூடியது. இடது பக்க மூளை பைசாவிற்கும் கணக்குப் பார்க்கக்கூடியது. நமக்கு இரண்டையும் சேர்த்து இயற்கை கொடுத்திருக்கிறது. பெருவாரியான பெண்கள் வலது மூளையைப் பயன்படுத்துகிறார்கள். பெருவாரியான ஆண்கள் இடது மூளையைப் பயன்படுத்துகிறார்கள்.



எங்கே எப்படி நடந்துகொள்ள வேண்டுமென்பது வாழ்வின் மிகப்பெரிய சாமர்த்தியம். என்னிடத்தில் ஓர் இளைஞர் வந்தார். அவருக்கு திருமணம் தள்ளிப் போய்க் கொண்டேயிருந்தது. என்ன காரணம் என்று கேட்டபோது எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் அவருடைய அம்மா ஒப்புக்கொள்ளவேயில்லை. அவருக்கு 30 வயதாகிவிட்டது. கவலைப்பட்டுக்கொண்டே என்னிடம் யோசனை கேட்டார். ‘அதற்கு ஒரே வழிதான் இருக்கிறது. உன் அம்மாவைப் போலவே ஒரு பெண்ணைப் பார்த்துவிடு. தோற்றம், சாயல், நடை, உடை பாவனை, விருப்பம், சமைக்கிற முறை போன்றவற்றில் உன் அம்மாவைப் போலவே இருப்பவளைப் பார். உறவில் பார். அம்மா வழி உறவிலேயே அப்படி யாரேனும் இருப்பார்கள். உடனடியாக திருமணத்தை முடித்துவிடலாம்” என்றேன்.



இரண்டு மாதம் கழித்து, இனிப்பு கொடுத்துவிட்டு சொன்னார், ” சார், என் அம்மா போலவே ஒரு பெண்ணைப் பார்த்துவிட்டேன். என் அம்மாவிற்கும் பிடித்துவிட்டது. அடுத்த மாதம் நிச்சயதார்த்தம். பிரச்சனை முடிந்தது” என்றார். இரண்டு மாதம் கழித்துப் பார்த்தால் நிச்சயதார்த்தம் நடக்கவில்லை, நின்று போய்விட்டது. என்னவென்றால், “என் அப்பாவிற்கு அந்தப் பெண்ணைப் பிடிக்கவில்லை. உன் அம்மாவைப்போல அவள் இருக்கிறாள், நான் அனுபவிப்பது போதாதா, உன்னை அந்த நரகத்தில் தள்ள மாட்டேன்” என்று நிறுத்திவிட்டார்.



நாற்பது வருடம் இணைந்து குடும்பம் நடத்தியவர்களுக்குள்ளேயே ஒருவருடைய உணர்வை இன்னொருவர் சரியாக புரிந்து கொள்வதில்லை. ஒரு விசித்திரமான தீர்வு உங்களுக்குச் சொல்கிறேன். “யாரும் யாரையும் புரிந்துகொள்ள முயற்சி செய்யாதீர்கள். அவர்கள் எப்படி இருக்கிறார்களோ அப்படியே ஏற்றுக்கொண்டு அடுத்த வேலைக்குப் போய்விட்டால், நம்முடைய வேலைகளை வெற்றிகரமாக சுலபமாக செய்யமுடியும் என்பது மிகப்பெரிய ரகசியம்.



வாழ்வின் நெளிவு சுழிவே இதுதான். மற்றவர்களை நம்பியே வாழவும் முடியாது. நம்பாமல் நாசமாகப் போகவும் கூடாது. இந்த இரண்டிற்கும் இடையில் ஆஹப்ஹய்ஸ்ரீண்ய்ஞ் செய்துகொண்டே இருக்க வேண்டும். இவர்கள் வாழ்வில் வெற்றி பெற்றுக்கொண்டே இருக்கிறார்கள்.



“Let there be a space for your togetherness” இது ஓர் அருமையான சிந்தனை. கணவன் மனைவி, நண்பர்கள், பங்குதாரர்கள் இப்படி யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். நீ வேறில்லை! நான் வேறில்லை என்று ஒருவரையொருவர் நிரம்ப நெருக்கமாக முடியாது. ஒரேயடியாக தள்ளியும் இருக்கமுடியாது.



ரயிலில் போகும்போது தண்டவாளத்தை கவனித்தேன். தண்டவாளத்துக்கு இடையில் சிறு இடைவெளி விட்டுத்தான் நட்டும் போல்ட்டும் இட்டு முடுக்கி வைத்திருக்கிறார்கள். ஏன் இடைவெளி கொடுத்து அதற்குப்பிறகு முடுக்கி இருக்கிறீர்கள் என்று கேட்டால், வெயில் காலத்தில் இரும்பு கொஞ்சம் விரிவடையும். அதற்கு கொஞ்சம் இடம் வேண்டும். பிறகு, குளிர்காலத்தில் இரும்பு கொஞ்சம் சுருங்கிவிடும். அப்படி சுருங்கி உள்ளே போவதற்கும், திரும்ப வெயில் காலத்தில் விரிவடைகிறபோது ஏற்கனவே நெருக்கமாக முடுக்கி இருந்தால், தண்டவாளம் மேலே வந்துவிடும். கொஞ்சம் இடைவெளி விட்டு முடுக்கி வைத்தால்தான் தண்டவாளம் ரயிலைக் கவிழ்க்காமல் ஓடிக் கொண்டிருக்கும் என்றார்கள்.



ரயில் ஓடுவதற்கு மட்டுமல்ல இது. நீங்கள் யாரோடும் பழகினாலும், “Let there be a space for your togetherness”. நீங்கள் அந்த இடைவெளி இருக்கும்படி பார்த்துக் கொண்டால் இந்த இடைவெளிதான் நமக்குள் இருக்கிற பிரச்னைகளை தீர்க்கிற காற்றோட்டமான இடம். அளவிற்கு மீறி நெருங்குவதும் பிழை. அளவிற்கு மீறி விலகி நிற்பதும் பிழை. கொஞ்சம் இடைவெளி விட்டு நெருங்கி நிற்கிற கலையை கற்றுக்கொண்டுவிட்டால் துன்பமில்லாத நிலைத்த வெற்றியை வாழ்வில் சந்திக்க முடியும்.



ஒரு குரு தன் சீடனுக்கு என்ன ஏற்படுத்துகிறான் என்ற சர்ச்சை நடக்கிறது. சீடனுக்கு ஒரு குரு வாழ்வில் என்ன மாற்றத்தை நிகழ்த்துகிறார் என்ற கேள்வி எழுகிறது. நீங்கள் டிஸ்கவரி சேனல் பார்த்திருக்கலாம். அதில் பறவைகள், பட்சிகள் இவற்றையெல்லாம் காட்டுவார்கள். இதில் அந்தத் தாய்ப் பறவை உணவை எடுத்துக்கொண்டு வந்து உள்ளுக்குள் இருக்கிற குஞ்சுப்பறவைகள் செக்கச்சிவந்த தன் வாயைப் பிளந்து கொண்டிருக்கும். தாய்ப்பறவை தன்னுடைய வாயிலேயே சுவைத்து, பிறகு குஞ்சுக்கு ஊட்டும். தாய்ப்பறவை பறந்து போகிறபோது, குஞ்சுப்பறவை பரிதாபமாகப் பார்க்கும். தாய் பறப்பது போல் நாம் பறக்க முடியுமா என்று சிந்தனை அதன் மனதில் ஓடும். ஆனால் பறக்காது. குஞ்சுப் பறவை கூட்டின் ஓரமாக வந்து நிற்கும். கூட்டைவிட்டு தாய்ப்பறவை பறந்து போகிறபோது பிரம்மித்துப் போய் நான் எப்படி பறப்பது என்று நினைக்கும். ஆனால் பறக்காது. தாய்ப்பறவை ஒருநாள் அந்த குஞ்சுப்பறவையை பறக்க வைக்கும்.



பலர் என்னிடம் வந்து எப்படி வாழ்வில் முன்னுக்கு வருவது. என்ன செய்வது என்று கேட்பார்கள். இதற்கான விடையை இந்த சேனலில் பார்த்தால்தான் புரியும். அந்தத் தாய்ப் பறவை ஒருநாள், குஞ்சுப்பறவையை தன் இறக்கையால் ஓர் இடி இடிக்கும். குஞ்சு கீழே விழப் போகும். ஆனால் அது கீழே விழாது. சட்டென்று தன் இறக்கையை விரித்து கீழே விழும். ஏனென்றால் அதற்கு இறக்கை இருக்கிறது என்றே இவ்வளவு நாள் தெரியவில்லை. அதற்கு இறக்கைகள் இருக்கிறது என்று எவ்வளவு சொன்னாலும் நம்பாது. ஆனால் கீழே தள்ளியவுடன், அந்த இறக்கை விரிந்துவிட்டால், வானம் வசப்பட்டுவிட்டது என்று குஞ்சுப் பறவை புரிந்து கொள்கிறது. அப்படி உங்களை வாழ்க்கையில் தள்ளாத வரை துன்பங்களை ஜெயிக்கிற கலையை கற்றுக்கொள்ள முடியாது. எழுத்து, பேச்சு எதுவும் தந்துவிட முடியாது. உங்களுக்கு அனுபவங்கள் சொல்லித்தரும் பாடத்தை உலகத்தில் எந்த ஆசிரியனும் சொல்லித்தரமுடியாது என்று புரிந்து கொள்ள வேண்டும்.



இதுபோன்று உங்களுக்கும் இறக்கைகள் இருக்கிறது என்பதை நினைவுபடுத்துவதுதான் பயிலரங்குகளின் வேலை.



உங்களுக்கான இறக்கையை உருவாக்க முடியாது. ஆனால் இருக்கிறது என்று நினைவுபடுத்துகிற வேலையைத்தான் நாங்கள் செய்கிறோம். ஆன்மீகத்திலும் குருமார்கள் உனக்குள் கடவுள் இருக்கிறார் என்று உணர்த்துகிற வேலையைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள்.



நமக்குள் இருக்கிற ஒரு பேராற்றலை ஏற்க மறுக்கிறோம். நம்ப மறுக்கிறோம். ஒரு சந்தர்ப்பம் அல்லது சூழ்நிலை வரும்போது நாம் அதைப்பற்றி கவலைப்பட்டு மேலே வரமுடிகிறது.



மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதைப்பற்றிக் கவலைப்படாதவர்கள்தான் அதிகம் ஜெயிக்கிறார்கள். பிறர் என்ன நினைப்பார்களோ என்று நினைத்து ஒவ்வொரு கணமும் நம்மைச் சுற்றி ஒரு நரகத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.



நேரத்தை எப்படி நிர்வகித்தால் எப்படி ஜெயிக்கலாம் என்பதைப்பற்றி லூகி.சீனிவாசன் சொன்னார். அதைச் சொல்வதற்கு அவர் பொருத்தமானவர். அந்தளவிற்கு சாதனைகள் செய்திருக்கிறார்.



கடிகாரத்தை காதில் வைத்துக் கேட்டால் ‘டிக், டிக்’ என்று கேட்கும். சிலபேருக்கு மட்டும் ‘குயிக், குயிக்’ என்று கேட்குமாம். ‘டிக் டிக் என்று கேட்பவர்கள் சாதாரணமானவர்கள். ‘குயிக் குயிக்’ என்று கேட்பவர்கள் சாதனையாளர்கள்.



அடுத்தது என்ன என்று யோசிக்கிறவன்தான் வாழ்வில் முன்னுக்கு வரமுடியும். பழையதை நினைத்து சிலாகித்துக்கொண்டே அமர்ந்திருந்தால், அடுத்து செய்ய வேண்டிய காரியங்களை செய்ய முடியாமல் போய்விடும். விழிப்புடையவர்கள் யார் என்று கேட்டால் அடுத்தது என்று சிந்தித்தவர்கள்தான். வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு போகிறார்கள். அவர்கள்தான் மிகச்சிறந்த வெற்றியினை அடையமுடிகிறது.



இந்த உலகம் பொருள்களால் ஆனது என்பது இதுநாள் வரை சொல்லப்பட்டுவந்தது. தற்போது இந்த உலகம் எண்ணங்களால் ஆனது என்கிற கோட்பாட்டை சொல்கிறார்கள்.



இந்த உலகமே எண்ணங்களால் உருவாகிறது என்கிறபோது நாம் எப்படி உருவாக வேண்டும் என்கிற எண்ணம்தான் நம்மை உருவாக்குகிறது. இன்னும் ஐந்து வருடங்கள் கழிந்து என்னவாக இருப்பேன் என்று நீங்கள் எந்த உருவத்தை வைத்திருக்கிறீர்களோ அதை நோக்கித்தான் போகிறீர்கள்.



எண்ணங்கள் சித்திரமாகி, உங்களைப் பற்றி என்ன உருவங்கள், சித்திரங்கள் வைத்திருக்கிறாயோ, அதுவாக மாறுகிறாய். இதற்கு “நங்ப்ச் ஐம்ஹஞ்ங்” என்று பெயர். தன் மனதில் என்ன ஐம்ஹஞ்ங் இருக்கிறதோ அதை நோக்கித்தான் ஒரு மனிதன் பயணப்படவேண்டும்.



உங்களைப் பற்றி உருவாக்கிக் கொள்கிற இமேஜ்தான் எல்லாவற்றையும் ஆட்டிப் படைக்கிறது. Self Image -னுடைய சக்தி பிரமிக்க வைக்கக்கூடிய சக்தி. அதனால்தான் சொல்கிறேன், உங்களைப்பற்றி உருவம் சிறந்ததாய், மேன்மையுடையதாய், உயர்ந்ததாய் இருக்க வேண்டும். இது எடுபடுமா என்று தெரியவில்லை. இது கிடைக்குமா என்று தெரியவில்லை என்றால் கீழே போவதை தவிர்க்க முடியாது.



தன்னைப்பற்றி ஒருவன் கொண்டிருக்கிற அபிப்பிராயம்தான் வெற்றி தோல்விகளை, மான அவமானங்களை, சமூகத்தில் அவனுடைய இடம் எது என்பதை நிர்ணயிக்கிறது.



முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் ஒரு பள்ளிக்கூடத்திற்கு சென்றிருந்தபோது மாணவிகளைப் பார்த்து, “ஐஸ்வர்யா ராயை உலக அழகியாக தேர்வு செய்வதற்கு என்ன காரணம்” என்று கேட்டார். ஒவ்வொருவரும் ஒரு பதிலைச் சொன்னார்கள். அதில் அவர் திருப்தியடையவில்லை.



எந்த விஷயமும் அழகு கிடையாது. உங்களுக்கு பிடித்ததினால் அது அழகாகத் தெரிகிறது என்கிறார்கள் மனோதத்துவ நிபுணர்கள்.



ஒரு பெண் மட்டும், “அந்தப் போட்டியில் நான் கலந்து கொள்ளாததால் வேறு வழியின்றி ஐஸ்வர்யா ராயை உலக அழகியாகத் தேர்ந்தெடுத்தார்கள்” என்றார். நம்பிக்கை அப்படியிருக்க வேண்டும். குற்ற உணர்வோடு இருந்தால் எப்படி வெல்ல முடியும்.



எல்லாவற்றுக்கும் ஓர் எல்லை இருக்கிறது. எல்லை எது என்பதை அறிந்துகொள்கிற திறமையும், நமக்கு இருக்க வேண்டும். எந்த இடத்தில் அது முடிவடைகிறது என்கிற தெளிவும் அறிவும் இருக்க வேண்டும்.



மயிற் பீலியை அளவுக்கு மீறி ஏற்றுகிறபோது அச்சு முறியும் என்று எச்சரிக்கிறார் வள்ளுவர். அதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். எந்த விஷயத்திற்கும் ஓர் எல்லை இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளவேண்டும்.



உழைப்பதோடு மட்டும் நிறுத்திக் கொள்ள வேண்டும். பலன் என்ன கிடைக்கும் என்று இருக்க முடியாது.



மனிதனைத் தகுதிப்படுத்தலாமே தவிர முடிவுகளை நாம் முடிவு செய்ய முடியாது.



பிரபஞ்சத்தின் நெடிய இயக்கம் வித்தியாசமானது. எத்தனையோ திட்டங்களை நாம் போட்டாலும்கூட மாறிப்போகும் வாய்ப்பிருக்கிறது.



எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்றால், இன்னொருவரை எடைபோட்டு பேசிக் கொண்டேயிருக்கிற வேலையை நிறுத்தவேண்டும். தேவையில்லாத தராசுகளை வைத்து நிறுத்திக் கொண்டே இருக்கக்கூடாது. அந்தத் தராசுகளை தூக்கியெறியுங்கள்.



ஒரு ஜென் துறவி அமர்ந்திருந்தார். அவரைப் பார்க்க ஒருவர் வந்தார். புல்லாங்குழல் வித்வானைப் பற்றி பேச்சு வந்தது. கலைஞர்கள் எப்போதும் சாதாரண வாழ்க்கை வாழ்கிறவர்கள் அல்ல. வித்தியாசமாக இருப்பார்கள். “அவர் ஒரு திருடன், குடிகாரன்” என்று வந்தவர் சொன்னார். ஜென் துறவியோ புகழ்ந்து பேசினார். அப்போது அங்கு வந்த இன்னொரு சீடன் இதைக் கவனித்துவிட்டு குருவிற்கு ஆதரவாகப் பேசினான். சீடன் பக்கம் திரும்பிய குரு அப்படியா! இல்லையே! அவன் திருடன்தான் என்றார். வந்தவருக்கு விளங்கவில்லை. சீடனுக்கும் புரியவில்லை. குருவைக் கேட்டார்கள். அவர் ‘நான் தராசை சீர் செய்கிறேன்’ “அவன் அவனாகவே இருக்கட்டும். நீ நீயாகவே இருக்கட்டும்” எதற்காக அவன் குறைகளைப்பற்றி நீ பேசுகிறாய். அதனால்தான் குறை சொன்னபோது நிறை சொன்னேன். நிறை சொன்ன போது குறை சொன்னேன். எப்போதும் முள் சரியாகவே இருக்கட்டும்” என்றார்.



பிறரை எடை போடுகிற வேலை நம்முடைய வேலையல்ல.



பிறர் விமர்சனத்துக்கு பதில் சொல்வதில் நம்முடைய காலம் வீணாகிறது. விமர்சனங்களை பொருட்படுத்தாதீர்கள். அது போலவே பிறரை எடை போடுவதிலும் காலம் வீணாகிறது. அதைப் பற்றியும் அதிகம் கவலைப்படாதீர்கள். உறித்த கோழியையும், ஆட்டையும் எடை போடுங்கள். இன்னொரு மனிதரை தராசில் நிறுத்தி எடை போடாதீர்கள்.



முயற்சிகளைக் கைவிடக்கூடாது. பலன் என்றாவது நிச்சயம். நமக்கு முன் ஒருவர் ஓடிக்கொண்டிருக்கிறார் என்பதற்காக நாம் தோற்றுவிட்டதாக அர்த்தமில்லை. எனவே ஓட்டத்தை நிறுத்தாதீர்கள். காரணம் எந்த முயற்சிக்கும் நிச்சயம் பரிசு உண்டு. இதை உள்ளத்தில் வாங்கிக் கொண்டு முயற்சிகளை தொடர்பவர்கள் வாழ்வில் தோல்வி அடைவதில்லை.

Thursday, October 1, 2009

General keyboard shortcuts

* CTRL+C (Copy)

* CTRL+X (Cut)

* CTRL+V (Paste)

* CTRL+Z (Undo)

* DELETE (Delete)

* SHIFT+DELETE (Delete the selected item permanently without placing the item in the Recycle Bin)

* CTRL while dragging an item (Copy the selected item)

* CTRL+SHIFT while dragging an item (Create a shortcut to the selected item)

* F2 key (Rename the selected item)

* CTRL+RIGHT ARROW (Move the insertion point to the beginning of the next word)

* CTRL+LEFT ARROW (Move the insertion point to the beginning of the previous word)

* CTRL+DOWN ARROW (Move the insertion point to the beginning of the next paragraph)

* CTRL+UP ARROW (Move the insertion point to the beginning of the previous paragraph)

* CTRL+SHIFT with any of the arrow keys (Highlight a block of text)

* SHIFT with any of the arrow keys (Select more than one item in a window or on the desktop, or select text in a document)

* CTRL+A (Select all)

* F3 key (Search for a file or a folder)

* ALT+ENTER (View the properties for the selected item)

* ALT+F4 (Close the active item, or quit the active program)

* ALT+ENTER (Display the properties of the selected object)

* ALT+SPACEBAR (Open the shortcut menu for the active window)

* CTRL+F4 (Close the active document in programs that enable you to have multiple documents open simultaneously)

* ALT+TAB (Switch between the open items)

* ALT+ESC (Cycle through items in the order that they had been opened)

* F6 key (Cycle through the screen elements in a window or on the desktop)

* F4 key (Display the Address bar list in My Computer or Windows Explorer)

* SHIFT+F10 (Display the shortcut menu for the selected item)

* ALT+SPACEBAR (Display the System menu for the active window)

* CTRL+ESC (Display the Start menu)

* ALT+Underlined letter in a menu name (Display the corresponding menu)

* Underlined letter in a command name on an open menu (Perform the corresponding command)

* F10 key (Activate the menu bar in the active program)

* RIGHT ARROW (Open the next menu to the right, or open a submenu)

* LEFT ARROW (Open the next menu to the left, or close a submenu)

* F5 key (Update the active window)

* BACKSPACE (View the folder one level up in My Computer or Windows Explorer)

* ESC (Cancel the current task)

* SHIFT when you insert a CD-ROM into the CD-ROM drive (Prevent the CD-ROM from automatically playing)

* CTRL+SHIFT+ESC (Open Task Manager)





Dialog box keyboard shortcuts



If you press SHIFT+F8 in extended selection list boxes, you enable extended selection mode. In this mode, you can use an arrow key to move a cursor without changing the selection. You can press CTRL+SPACEBAR or SHIFT+SPACEBAR to adjust the selection. To cancel extended selection mode, press SHIFT+F8 again. Extended selection mode cancels itself when you move the focus to another control.



* CTRL+TAB (Move forward through the tabs)

* CTRL+SHIFT+TAB (Move backward through the tabs)

* TAB (Move forward through the options)

* SHIFT+TAB (Move backward through the options)

* ALT+Underlined letter (Perform the corresponding command or select the corresponding option)

* ENTER (Perform the command for the active option or button)

* SPACEBAR (Select or clear the check box if the active option is a check box)

* Arrow keys (Select a button if the active option is a group of option buttons)

* F1 key (Display Help)

* F4 key (Display the items in the active list)

* BACKSPACE (Open a folder one level up if a folder is selected in the Save As or Open dialog box)





Microsoft natural keyboard shortcuts



* Windows Logo (Display or hide the Start menu)

* Windows Logo+BREAK (Display the System Properties dialog box)

* Windows Logo+D (Display the desktop)

* Windows Logo+M (Minimize all of the windows)

* Windows Logo+SHIFT+M (Restore the minimized windows)

* Windows Logo+E (Open My Computer)

* Windows Logo+F (Search for a file or a folder)

* CTRL+Windows Logo+F (Search for computers)

* Windows Logo+F1 (Display Windows Help)

* Windows Logo+ L (Lock the keyboard)

* Windows Logo+R (Open the Run dialog box)

* Windows Logo+U (Open Utility Manager)





Accessibility keyboard shortcuts



* Right SHIFT for eight seconds (Switch FilterKeys either on or off)

* Left ALT+left SHIFT+PRINT SCREEN (Switch High Contrast either on or off)

* Left ALT+left SHIFT+NUM LOCK (Switch the MouseKeys either on or off)

* SHIFT five times (Switch the StickyKeys either on or off)

* NUM LOCK for five seconds (Switch the ToggleKeys either on or off)

* Windows Logo +U (Open Utility Manager)





Windows Explorer keyboard shortcuts



* END (Display the bottom of the active window)

* HOME (Display the top of the active window)

* NUM LOCK+Asterisk sign (*) (Display all of the subfolders that are under the selected folder)

* NUM LOCK+Plus sign (+) (Display the contents of the selected folder)

* NUM LOCK+Minus sign (-) (Collapse the selected folder)

* LEFT ARROW (Collapse the current selection if it is expanded, or select the parent folder)

* RIGHT ARROW (Display the current selection if it is collapsed, or select the first subfolder)





Shortcut keys for Character Map



After you double-click a character on the grid of characters, you can move through the grid by using the keyboard shortcuts:



* RIGHT ARROW (Move to the right or to the beginning of the next line)

* LEFT ARROW (Move to the left or to the end of the previous line)

* UP ARROW (Move up one row)

* DOWN ARROW (Move down one row)

* PAGE UP (Move up one screen at a time)

* PAGE DOWN (Move down one screen at a time)

* HOME (Move to the beginning of the line)

* END (Move to the end of the line)

* CTRL+HOME (Move to the first character)

* CTRL+END (Move to the last character)

* SPACEBAR (Switch between Enlarged and Normal mode when a character is selected)





Microsoft Management Console (MMC) main window keyboard shortcuts



* CTRL+O (Open a saved console)

* CTRL+N (Open a new console)

* CTRL+S (Save the open console)

* CTRL+M (Add or remove a console item)

* CTRL+W (Open a new window)

* F5 key (Update the content of all console windows)

* ALT+SPACEBAR (Display the MMC window menu)

* ALT+F4 (Close the console)

* ALT+A (Display the Action menu)

* ALT+V (Display the View menu)

* ALT+F (Display the File menu)

* ALT+O (Display the Favorites menu)





MMC console window keyboard shortcuts



* CTRL+P (Print the current page or active pane)

* ALT+Minus sign (-) (Display the window menu for the active console window)

* SHIFT+F10 (Display the Action shortcut menu for the selected item)

* F1 key (Open the Help topic, if any, for the selected item)

* F5 key (Update the content of all console windows)

* CTRL+F10 (Maximize the active console window)

* CTRL+F5 (Restore the active console window)

* ALT+ENTER (Display the Properties dialog box, if any, for the selected item)

* F2 key (Rename the selected item)

* CTRL+F4 (Close the active console window. When a console has only one console window, this shortcut closes the console)





Remote desktop connection navigation



* CTRL+ALT+END (Open the Microsoft Windows NT Security dialog box)

* ALT+PAGE UP (Switch between programs from left to right)

* ALT+PAGE DOWN (Switch between programs from right to left)

* ALT+INSERT (Cycle through the programs in most recently used order)

* ALT+HOME (Display the Start menu)

* CTRL+ALT+BREAK (Switch the client computer between a window and a full screen)

* ALT+DELETE (Display the Windows menu)

* CTRL+ALT+Minus sign (-) (Place a snapshot of the entire client window area on the Terminal server clipboard and provide the same functionality as pressing ALT+PRINT SCREEN on a local computer.)

* CTRL+ALT+Plus sign (+) (Place a snapshot of the active window in the client on the Terminal server clipboard and provide the same functionality as pressing PRINT SCREEN on a local computer.)



Microsoft Internet Explorer navigation



* CTRL+B (Open the Organize Favorites dialog box)

* CTRL+E (Open the Search bar)

* CTRL+F (Start the Find utility)

* CTRL+H (Open the History bar)

* CTRL+I (Open the Favorites bar)

* CTRL+L (Open the Open dialog box)

* CTRL+N (Start another instance of the browser with the same Web address)

* CTRL+O (Open the Open dialog box, the same as CTRL+L)

* CTRL+P (Open the Print dialog box)

* CTRL+R (Update the current Web page)

* CTRL+W (Close the current window)

Acer E-Machine

Wednesday, September 23, 2009

சீத்தாப்பழம்

சீத்தாப்பழம்




சீத்தாப்பழம் தனிப்பட்ட மணமும், சுவையும் கொண்டது. சீத்தாப்பழத்தின் தோல், விதை, இலை, மரப்பட்டை, அனைத்துமே அரிய மருத்துவ பண்புகளை கொண்டது. ஆங்கிலத்தில் சீத்தாப்பழத்திற்கு கஸ்டட் ஆப்பிள் என்றும், இந்தியில் சர்பா என்றும் பெயராகும். இதன் தாவரவியல் பெயர்- Annona squamosa என்று பெயர்.



சீத்தாப்பழத்தில்- நீர்சத்து அதிகமாக உள்ளது. மேலும் மாவுசத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புக்கள், நார்ச் சத்து, சுண்ணாம் புச்சத்து, பாஸ்பரஸ், இரும்பு சத்து போன்றவை அடங்கியுள்ளன. இத்தகைய சத்துக்கள் சீத்தாப்பழத்தில் அடங்கியிருப்பதனால் தான் இப்பழம் மிகுந்த மருத்துவ பயன்களை அடக்கியுள்ளது.



மருத்துவ பயன்கள்



1. சீத்தாப்பழத்தை உண்ண செரிமானம் ஏற்படும். மலச்சிக்கல் நீங்கும்.



2. சீத்தாப்பழச்சதையோடு உப்பை கலந்து உடையாத பிளவை பருக்கள் மேல் பூசிவர பிளவை பழுத்து உடையும்.



3. இலைகளை அரைத்து புண்கள் மேல் போட்டுவரை புண்கள் ஆறும்.



4. விதைகளை பொடியாக்கி சம அளவு பொடியுடன் சிறுபயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து குளித்து வர முடி மிருதுவாகும். பேன்கள் ஒழிந்து விடும்.



5. சீத்தாப்பழம் குளிர் மற்றும் காய்ச்சலை குணப்படுத்தும்.



6. சீத்தாப் பழ விதை பொடியோடு கடலை மாவு கலந்து எலுமிச்சை சாறில் குழைத்து தலையில் தேய்த்து ஊறிய பின்னர் குளித்து வர முடி உதிராது.



7. சீத்தாப்பழ விதைப்பொடியை மட்டும் தலையில் தேய்த்து குளித்து வந்தால் முடி உதிராது.



8.சிறுவர்களுக்கு சீத்தாப்பழம் கொடுத்துவர எலும்பு உறுதியாகும். பல்லும் உறுதியாகும்.



9.சிறிதளவு வெந்தயம், சிறுபயிறு, இரண்டையும் இரவு ஊறவைத்து பின்னர் காலையில் அரைத்து இதோடு சீத்தாப்பழ விதைப்பொடியை கலந்து தலையில் தேய்த்து ஊறியபின்னர் குளித்துவர தலை குளிர்ச்சி பெறும். முடியும் உதிராது. பொடுகு காணாமல் போகும்.



10 சீத்தாப்பழத்தை தொடர்ந்து உண்டு வந்தால் இதயம் பலப்படும். காசநோய் இருந்தாலும் மட்டுப்படும்.

Sunday, September 13, 2009

TOLL FREE NUMBERS

Important Toll Free Phone Number of top companies and service providers in India is what most people search on web. Any one can use this service easily from a land line phone (mobile phones does not work with these numbers) using which one can get in touch with the agency for free.




Important Toll Free Phone Number List



Description Number

Blood Bank 1910



Women in Distress 1020

CATS 1099

eye bank helpline 1919

Child Labour complaint Old age help line anti courreption Help Line 1098

Heart Attack 1050

Heart Brigade 1051

Police 100

Fire brigade 101

Accidents 102

AIDS Control Centre 1097

Local Assistance 199



Airlines Toll Free Phone Numbers :

Indian Airlines 1800 180 1407

Jet Airways 1800 22 5522

SpiceJet 1800 180 3333

Air India 1800 22 7722

KingFisher 1800 180 0101



Automobiles Toll Free Phone Numbers :

Mahindra Scorpio 1800 22 6006

Maruti 1800 111 515

Tata Motors 1800 22 5552

Windshield Experts 1800 11 3636



Banks Toll Free Phone Numbers :

ABN AMRO 1800 11 2224

Canara Bank 1800 44 6000

Citibank 1800 44 2265

Corporatin Bank 1800 443 555

Development Credit Bank 1800 22 5769

HDFC Bank 1800 227 227

ICICI Bank 1800 333 499

ICICI Bank NRI 1800 22 4848

IDBI Bank 1800 11 6999

Indian Bank 1800 425 1400

ING Vysya 1800 44 9900

Kotak Mahindra Bank 1800 22 6022

Lord Krishna Bank 1800 11 2300

Punjab National Bank 1800 122 222

State Bank of India 1800 44 1955

Syndicate Bank 1800 44 6655



Cell Phones Toll Free Phone Numbers :

BenQ 1800 22 08 08

Bird CellPhones 1800 11 7700

HTC 1800 11 33 77

Motorola MotoAssist 1800 11 1211

Nokia 3030 3838

Sony Ericsson 3901 1111



Computers/IT Toll Free Phone Numbers :

Adrenalin 1800 444 445

AMD 1800 425 6664

Apple Computers 1800 444 683

Canon 1800 333 366

Cisco Systems 1800 221 777

Compaq HP 1800 444 999

Data One Broadband 1800 424 1800

Dell 1800 444 026

Epson 1800 44 0011

eSys 3970 0011

Genesis Tally Academy 1800 444 888

HCL 1800 180 8080

IBM 1800 443 333

Lexmark 1800 22 4477

Marshal’s Point 1800 33 4488

Microsoft 1800 111 100

Microsoft Virus Update 1901 333 334

Seagate 1800 180 1104

Symantec 1800 44 5533

TVS Electronics 1800 444 566

WeP Peripherals 1800 44 6446

Wipro 1800 333 312

xerox 1800 180 1225

Zenith 1800 222 004



Couriers/Packers & Movers Toll Free Phone Numbers :

ABT Courier 1800 44 8585

AFL Wizz 1800 22 9696

Agarwal Packers & Movers 1800 11 4321

Associated Packers P Ltd 1800 21 4560

DHL 1800 111 345

FedEx 1800 22 6161

Goel Packers & Movers 1800 11 3456

UPS 1800 22 7171



Education Toll Free Phone Numbers :

Edu Plus 1800 444 000

Hindustan College 1800 33 4438

NCERT 1800 11 1265

Vellore Institute of Technology 1800 441 555

Amity University NCR Delhi 1800 110 000



Healthcare Toll Free Phone Numbers :

Best on Health 1800 11 8899

Dr Batras 1800 11 6767

GlaxoSmithKline 1800 22 8797

Johnson & Johnson 1800 22 8111

Kaya Skin Clinic 1800 22 5292

LifeCell 1800 44 5323

Manmar Technologies 1800 33 4420

Pfizer 1800 442 442

Roche Accu- Chek 1800 11 45 46

Rudraksha 1800 21 4708

Varilux Lenses 1800 44 8383

VLCC 1800 33 1262



Home Appliances Toll Free Phone Numbers :

Aiwa/Sony 1800 11 1188

Anchor Switches 1800 22 7979

Blue Star 1800 22 2200

Bose Audio 1800 11 2673

Bru Coffee Vending Machines 1800 44 7171

Daikin Air Conditioners 1800 444 222

DishTV 1800 12 3474

Faber Chimneys 1800 21 4595

Godrej 1800 22 5511

Grundfos Pumps 1800 33 4555

LG 1901 180 9999

Philips 1800 22 4422

Samsung 1800 113 444

Sanyo 1800 11 0101

Voltas 1800 33 4546

WorldSpace Satellite Radio 1800 44 5432



Hotel Reservations Toll Free Phone Numbers :

GRT Grand 1800 44 5500

InterContinental Hotels Group 1800 111 000

Marriott 1800 22 0044

Sarovar Park Plaza 1800 111 222

Taj Holidays 1800 111 825



Insurance Toll Free Phone Numbers :

AMP Sanmar 1800 44 2200

Aviva 1800 33 2244

Bajaj Allianz 1800 22 5858

Chola MS General Insurance 1800 44 5544

HDFC Standard Life 1800 227 227

LIC 1800 33 4433

Max New York Life 1800 33 5577

Royal Sundaram 1800 33 8899

SBI Life Insurance 1800 22 9090



Mattresses Toll Free Phone Numbers :

Kurl- on 1800 44 0404

Sleepwell 1800 11 2266



Investments/Finance Toll Free Phone Numbers :

CAMS 1800 44 2267

Chola Mutual Fund 1800 22 2300

Easy IPO’s 3030 5757

Fidelity Investments 1800 180 8000

Franklin Templeton Fund 1800 425 4255

J M Morgan Stanley 1800 22 0004

Kotak Mutual Fund 1800 222 626

LIC Housing Finance 1800 44 0005

SBI Mutual Fund 1800 22 3040

Sharekhan 1800 22 7500

Tata Mutual Fund 1800 22 0101



Paints Toll Free Phone Numbers :

Asian Paints Home Solutions 1800 22 5678

Berger Paints Home Decor 1800 33 8800



Teleshopping Toll Free Phone Numbers :

Asian Sky Shop 1800 22 1800

Jaipan Teleshoppe 1800 11 5225

Tele Brands 1800 11 8000

VMI Teleshopping 1800 447 777

WWS Teleshopping 1800 220 777



Travel Toll Free Phone Numbers :

Club Mahindra Holidays 1800 33 4539

Cox & Kings 1800 22 1235

God TV Tours 1800 442 777

Kerala Tourism 1800 444 747

Kumarakom Lake Resort 1800 44 5030

Raj Travels & Tours 1800 22 9900

Sita Tours 1800 111 911

SOTC Tours 1800 22 3344

Ticketvala .com 1800 209 2222





UPS :

APC 1800 44 4272

Numeric 1800 44 3266



Indian Railways :

Indian Railway General Enquiry 131

Indian Railway Central Enquiry 131

Indian Railway Reservation 131,132

Indian Railway Railway Reservation Enquiry 1345,1335,1330

Indian Railway Centralised Railway Enquiry 1330/1/2/3/4/5/6/7/8/9

IVRS (English) 1361

IVRS (Hindi) 1362



Others Important Helplines :

Consumer Helpline 1800 11 4000

loreal garnier 1800 223 000

KONE Elevator 1800 444 666

Indane 1800 44 51 15

Aavin 1800 44 3300

Pedigree 1800 11 2121

Kodak India 1800 22 8877

Domino’s Pizza 1800 111 123

World Vision India 1800 444 550

Telecom Monitoring Cell 1800 110 420

Friday, September 11, 2009

வெற்றிகரமான தோல்விகள்

நம் அன்றாட வாழ்வில் செய்யும் செய்யும் அனைத்துக் காரியங்களிலும் வெற்றி பெற வேண்டுமென்று நாம் விரும்புவது இயல்பு. அடுத்தடுத்து தடைகள், தோல்விகள் ஏற்படும் போது வெறுப்பு ஏற்படுவதும் இயல்பு. அது போன்று நிகழும்போதெல்லாம் நான் படித்த சில வெற்றியாளர்களி‎ன் தோல்விகளை எண்ணிப் பார்ப்பதுண்டு. அவைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.




கணிணி மூலம் 21ம் நூற்றாண்டில் உலக மக்களின் அன்றாட வாழ்வினையே மாற்றியமைத்த பெருமை, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அதிபர் பில்கேட்ஸைச் சேரும். 10 வருடங்களுக்கும் மேலாக உலகின் மிகப்பெரிய பணக்காரராக திகழ்பவர். 1970ல் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பயின்ற அவர் படிப்பை பாதியில் நிறுத்த வேண்டிய சூழ்நிலை.



*****



பள்ளியில் 5ஆம் வகுப்பு வரை கூட பயிலாதவர் அமெரிக்க அதிபர் ஆப்ரகாம் லிங்கன். பிற்காலத்தில் அரசியலில் வெவ்வேறு தேர்தல்களில், வெவ்வேறு பதவிகளுக்கு 12 முறை தோல்வியடைந்தவர். ‏இருப்பினும் மனம் தளராது முயன்று, வெ‎ன்று அமெரிக்காவின் 16வது ஜனாதிபதியானார் என்று அறியும்போது மிகவும் ஆச்சர்யமாக உள்ளதல்லவா?



*****



ஐசக் நியூட்டன் அவர்கள் அக்காலகட்டத்தில் வாழ்ந்த மிகச் சிறந்த கணித மேதைகளுள் ஒருவர். ஒலியியல் மற்றும் புவியீர்ப்பு விதிகள் அவரை தலை சிறந்த விஞ்ஞானியாகப் போற்ற காரணமானவை. அவர் பிறவியிலேயே அறிவாளி என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? அதுதான் இல்லை. அவர் பள்ளியில் படிக்கும்போது மிக மோசமாக படிக்கும் மாணவருள் ஒருவர். ஆசிரியர்கள் அவரைப் படிக்க வைக்க பல வகைகளில் முயன்றும் அவை தோல்வியிலேயே முடிந்தன எ‎ன்பது குறிப்பிடத்தக்கது.



*****



லுட்விக் வான் பீதோவன் உலக வரலாற்றின் தலை சிறந்த இசை அறிஞர்களுள் ஒருவர் என்பது எல்லோரும் அறிந்ததே. அவருடைய இசைக்கு மயங்காதவர்களே கிடையாது. ஆனால் சிறு வயதில் அவருக்கு பாட்டு கற்பித்த ஆசிரியர், 'என்றுமே உன்னால் ஒரு உருப்படியான இசையமைப்பாளராக முடியாது' என்றாராம். இசையமைக்க ஆரம்பிக்கு முன்பே கேட்கும் திறனை இழந்தவர் அவர் என்பது நம்மில் பலருக்குத் தெரியாது. அந்த நிலையிலும் மிக அற்புதமாக இசையளித்தார் என்பது ஆச்சரியப்பட வைக்கிறது.



*****



அன்றாட வாழ்விற்குத் தேவையான பல கருவிகளை நமக்குக் கண்டுபிடித்துத் தந்தவர் தாமஸ் ஆல்வா எடிசன். சரித்திரம் போற்றும் விஞ்ஞானியான இவர் பெயரில் 1093 அமெரிக்க கண்டுபிடிப்பு உரிமம் உள்ளது என்றால் வியப்பாக இருக்கிறது. ஆனால் சிறு வயதில் இவருக்கு பாடம் கற்பித்த ஆசிரியர் 'உன்னால் எதுவுமே கற்க முடியாது' என்று கூறியிருக்கிறார். அவர் முதல் முதலாக உருவாக்கியது மின் விளக்கு. ‏அதை 9000 முறை பரிசோதனைகள் செய்து தோல்வி கண்ட பிறகே, கண்டுபிடிக்க முடிந்ததாம்!



*****



சில்லறைப் பொருட்களை விற்கும் வணிக நிறுவன வகையைச் சேர்ந்தது உல்வெர்த் நிறுவனம். ப்ரான்க் வின்பீல்ட் உல்வெர்த் தனது முதல் அங்காடியை 1878ஆம் தொடங்கினார். சில வருடங்களிலேயே உலகமெங்கும் கிளைகளைக் கொண்டதாக வளர்ந்தது அந்நிறுவனம். ஆனால் உல்வெர்த் 21 வயதில், இந்நிறுவனம் தொடங்குவதற்கு முன்பு அங்காடி ஒன்றில் பணிபுரிந்தார். அதன் உரிமையாளர் அவருக்கு வாடிக்கையாளர்களை சரிவர கவனித்துக்கொள்ளத் தெரியவில்லை என்று மட்டம் தட்டியிருக்கிறார்.



*****



மைக்கேல் ஜோர்டன் மிகச் சிறந்த கூடைப்பந்து வீரர். தனி ஒரு மனிதனாக நாட்டின் கூடைப்பந்துக் குழுவின் அமைப்பையே மாற்றியமைத்த பெருமை இவரைச் சேரும். அமைப்பில் சேர்வதற்கு முன்பு மற்றவர்களைப்போல ஒரு சாதாரண மனிதர் இவர். போதிய தகுதியில்லாத காரணத்தால் இவர் பள்ளியின் கூடைப்பந்து குழுவிலிருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.



*****



அமெரிக்காவைச் சேர்ந்த வால்டர் டிஸ்னி தயாரிப்பு, இயக்கம், திரைக்கதை, பின்னணிக் குரல், கேலிச் சித்திர உயிரூட்டம் இப்படிப் பல கலைகளில் வல்லவர். உலகின் மிகச்சிறந்த திரைப்படத் தயாரிப்பாளர்களுள் ஒருவர். இன்றைக்கு வால்ட் டிஸ்னி என்ற கூட்டு ஸ்தாபனம் வருடத்திற்கு சராசரியாக 300 கோடி அமெரிக்க டாலர்களை வருவாயாக ஈட்டுகிறது. டிஸ்னி தன்னுடைய சுயதொழிலை வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் துவங்கினார். அவருடைய முதல் கேலிச் சித்திர தயாரிப்பால் கடனாளியானார் என்பதை அறிவீர்களா? அவருடைய முதல் பத்திரிக்கையாளர் கூட்டத்தில் பத்திரிக்கை ஆசிரியர் ஒருவர், டிஸ்னிக்கு திரைப்பட தயாரிப்பைப் பற்றி ஒன்றுமே தெரியாது என்று கேலி செய்திருக்கிறார்.