Saturday, April 1, 2017

monitor offer, system offer



Saturday, April 23, 2011

ப்ளு-டூத் (Bluetooth) எப்படி உருவானது தெரியுமா??

தற்போதைய மொபைல் போன்கள் அனைத்திலும் ப்ளு-டூத் வசதி இருப்பதாக விளம்பரம் செய்திருப்பார்கள். அதென்ன ப்ளு-டூத்? முன்னொரு காலத்தில் ப்ளு-டூத் என்றொரு அரசன் இருந்தான். அவனுக்கு பற்கள் நீலக்கலரில் இருந்தன. இதனால் தான் அந்த பெயர். அந்தக்காலத்தில் சிதறிக்கிடந்த ஸ்காண்டி நேவிய நாடுகளையெல்லாம் அவன் ஒன்றாக சேர்த்து, ஒரே ஆட்சியின் கீழ் கொண்டு வந்தானாம். அதனால் தான் எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களையெல்லாம் அவன் மன்னனின் பெயரை வைத்து விட்டனர். பெயர் வித்தியாசமாக இருந்ததும் ஒரு காரணம்.

தற்போதைய மொபைலை மூன்று தலைமுறையாக பிரிக்கிறார்கள். ஆரம்ப காலத்தில் அமெரிக்கா கண்டுபிடித்த மொபைல் போன் அனலாக் முறையில் வேலை செய்தது. இது முதல் தலை முறை தொழில் நுட்பம். அதாவது 1ஜி. (முதல் ஜெனரேஷன்). இப்போது நாம் பயன்படுத்துவது 2ஜி என்ற இரண்டாம் தலை முறை தொழில் நுட்பம். இது டிஜிட்டல் இணைப்பு முறையாகும். இதன்மூலம் பேச்சு மட்டுமின்றி பாடல்கள், படங்கள் போன்றவற்றை அனுப்பி பெற முடிகிறது. இதற்கு அடுத்தடுத்து 3ஜி எனப்படும் 3ம் தலைமுறை தொழில்நுட்பம். இதன்மூலம் முகம்பார்த்து பேசுவது உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப வசதிகளை பெற முடியும்.

ப்ளு-டூத் என்பது 2.4 கிலோ ஹெர்ட்ஸ் ரேடியோ அலைகளை பயன்படுத்தி 720 கிலோ பிட் வேகத்தில் பரிமாற்றம் நடக்கிறது. தற்போது பரவலாக மொபைல் போன்களில் பயன்படுத்தப்படும் இந்த ப்ளு-டூத் வசதி மூலம் கம்ப்யூட்டர்கள், கீ போர்டுகள், பிரிண்டர்கள், மியுசிக் சிஸ்டம், வாசிங் மெஷின்கள், மைக்ரோ வேவ் ஓவன் உள்ளிட்ட எந்த பொருளையும் ப்ளு-டூத் வசதி மூலம் எங்கிருந்தும் இயக்க முடியும். ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு டெக்னிக்கல் முகவரி அதாவது ஐ.டி. கொடுக்க வேண்டும். இவற்றை இயக்குவதில் ரகசியமும், பாதுகாப்பும் கொடுக்கப்படும். இந்த தொழில் நுட்பத்தை முதன்முதலாக பயன்படுத்தியது, எரிக்சன் என்ற ஐரோப்பிய நிறுவனம். பின்னர் ஐ.பி.எம்., இன்டெல், மற்றும் ஜப்பானிய நிறுவனங்கள் அனைத்தும் சேர்ந்து கொண்டன. ப்ளு-டூத் தொழில் நுட்பத்தால் எதிர்காலத்தில் கேபிளே இல்லாமல் அனைத்தும் காற்றில் இயங்கும் நிலை வரலாம்



Thanks To : http://puthiyaulakam.com/?p=2237

Saturday, March 12, 2011

தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள்




சித்தர்களின் தலைவர் அகத்தியர் வாழும் பாபநாசம் மலையடிவாரத்திலிருந்து தாமிரபரணி நதிக்கரையோரம் 97 கி.மீட்டர்கள் தூரத்துக்குள் இந்த நவக்கிரகஸ்தலங்கள் அமைந்துள்ளன. 

இவை நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்ட மக்களால் பெரும்பாலும் வழிபாடு செய்யப்பட்டுவருகின்றன.ஏனெனில்,இந்த கோயில்கள் பற்றி சிலருக்கே தெரிந்திருக்கின்றன.


அகத்திய முனிவரின் சீடரான உரோமச  முனிவர் முக்தியை வேண்ட, ஸ்ரீ அகத்திய மாமுனிவரின் கூற்றுப்படி, ஜீவ நதியான தாமிர பரணியில், ஒன்பது தாமரை மலர்களை விட்டு, அவை கரை ஒதுங்கும் இடத்தில், ஸ்ரீ கைலாசநாதரை பிரதிஷ்டை செய்து வழிபட்டு, முக்தி பெற்றார் அவ்வாறு ஏற்பட்ட நவ கயிலாய ஸ்தலங்களான

1. பாபநாசம்  2. சேரன்மாதேவி   3. கோடகநல்லூர்  4. குன்னத்தூர்  5. முறப்பாடு  6. ஸ்ரீ வைகுண்டம்  7. தென் திருப்பேரை  8. இராஜபதி  9. சேர்ந்த பூமங்கலம்  

[T_500_871.jpgபாபநாசம்.jpg]
பொதிகைமலை எனப்படும் பாபநாசம் மலையில் பாணதீர்த்தம் அருவியின் அருகில் சூரியபகவானின் அம்சமான சிவலிங்கம் அமைந்துள்ளது.இந்தக்கோவில் காலை மணி 6.30 முதல் 11.30 வரையிலும்,மாலை 4.30 முதல் இரவு 8.00 மணி வரையிலும் திறந்திருக்கும்.இந்தக்கோவிலின் அர்ச்சகர்கள் திரு.சதாசிவபட்டர் மற்றும் திரு.ஹரிகரசுப்பிரமணியன் விக்கிரமசிங்கபுரம் தெற்குமாடவீதியில் வசிக்கின்றனர்.


சேரன்மகாதேவியில் சந்திரபகவானின் அம்சமாக சிவபெருமான் எழுந்தருளியுள்ளார்.இக்கோவில் காலை 7 முதல் 9 வரையிலும்,மாலை 5.30 முதல் 6.30 வரையிலும் திறந்திருக்கும்.இதன் அர்ச்சகர் திரு.சந்துரு,சேரன்மகாதேவியில் அக்ரஹாரம் தெருவில் வசிக்கிறார்.இவரது செல்:9442226511.

கோடகநல்லூரில் செவ்வாய்பகவான் சிவபெருமானாக எழுந்தருளிவருகிறார்.இந்தகோவில் காலை 7 முதல் 8.30 வரையிலும்,மாலை 4.30 முதல் 6.30 வரையிலும் திறந்திருக்கும்.இதன் அர்ச்சகர் திரு.சுரேஷ் சிவாச்சாரியார் அவர்களின் போன்:04534-261849.

குன்னத்தூரில் ராகுபகவானின் அம்சத்துடன் இருப்பவர் சிவபெருமான்.இக்கோவில் காலை 7 முதல் 10 வரையிலும்,மாலை 5 முதல் 6 வரையிலும் திறந்திருக்கும்.இந்தக்கோவிலின் அர்ச்சகர் திரு.ராமச்சந்திரன் என்ற சந்துரு திருவேங்கடநாதபுரம் என்ற இடத்தில் வாழ்கிறார்.இவரது செல்:9442018567,9442018077.

முறப்பநாடு என்ற இடத்தில் உள்ள சிவபெருமானே குரு பகவானாக அருள்பாலிக்கிறார்.இக்கோவில் காலை 7 முதல் 10 வரையிலும்,மாலை 5 முதல் 7.30 வரையிலும் திறந்திருக்கும்.இதன் அர்ச்சகர் பெயர்:திரு.செல்லப்பா ஐயர்,இவரது செல்:9842404559.

ஸ்ரீவைகுண்டத்தில் சிவபெருமான் சனிபகவானின் அம்சமாகத் திகழ்கிறார்.ஸ்ரீவைகுண்டத்தில் பேருந்து நிலையம் அருகில் இருப்பவர் பெருமாள்.அவரைத் தாண்டி ஒரு தெரு தள்ளிதான் சிவபெருமான் இருக்கிறார். சனிப்பிரதோஷ நாள் மட்டும் மாலை 4.30 முதல் 6.00 வரை சிவ வழிபாடு செய்தால் 5 வருடங்களுக்கு தினமும் சிவனை வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது சைவசித்தாந்த விதிமுறையாகும்.  இக்கோவில் காலை 7 முதல் 10 மணி வரையிலும்,மாலை 5 முதல் 7.30 வரையிலும் திறந்திருக்கும்.இதன் அர்ச்சகர் திரு.கே.சிவகுருபட்டர்.கோவில்வாசல்.போன்:04630-252117.

தென் திருப்பேரையில் புதன் பகவானின் அம்சமாக சிவபெருமான் அருள்பாலித்துவருகிறார்.இக்கோவில் காலை 7 முதல் 10 வரையிலும்,மாலை 5 முதல் 8 வரையிலும் திறந்திருக்கும்.இதன் அர்ச்சகர் திரு.கமலேஷ் பட்டர் செல்:9365889291.

கேது பகவானின் அம்சம் பெற்ற சிவபெருமான் ராஜபதியில் இருக்கிறார்.இக்கோயில் ஏரலுக்கும் குரும்பூருக்கும் இடையில் இருக்கின்றது.இக்கோவில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். குருக்கள் : திரு.லட்சுமணன்,திரு.ஜோதி செல்:9787382258,9942062825.

சுக்கிரபகவானின் அம்சமான சிவபெருமான் சேர்ந்தபூமங்கலம் என்ற ஊரில் வாசம் செய்கிறார்.இக்கோவில் காலை 7.30 முதல் 9.30 வரையிலும்,மாலை 5.30 முதல் 7.30 வரையிலும் திறந்திருக்கும்.இதன் அர்ச்சகர்கள் திரு.குமாரசுவாமிபட்டர் மற்றும் திரு.ஈஸ்வரபட்டர் செல் மற்றும் போன்:9486178063,04639-239319.


பாபநாசத்திலிருந்து சேரன்மகாதேவி 22 கி.மீதூரத்திலும்,
சேரன்மகாதேவியிலிருந்து கோடகநல்லூர் 15 கி.மீ.தூரத்திலும்,
கோடகநல்லூரிலிருந்து குன்னத்தூர் 12 கி.மீ.தூரத்திலும்,
குன்னத்தூரிலிருந்து முறப்பநாடு 18 கி.மீ. தூரத்திலும்,
முறப்பநாட்டிலிருந்து ஸ்ரீவைகுண்டம் 20 கி.மீ.தூரத்திலும்,
ஸ்ரீவைகுண்டத்திலிருந்து தென் திருப்பேரை 6 கி.மீ.தூரத்திலும்,
தென் திருப்பேரையிலிருந்து இராஜபதி 4 கி.மீ.தூரத்திலும் அமைந்துள்ளன.

ஆக மொத்தம் 97 கி.மீ.தூரத்திற்குள் அமைந்திருக்கின்றன.

ஆன்மீக சுற்றுலாவில் ஆர்வம் இருக்கும் அன்பர்கள், தவறாமல் பயன் படுத்திக் கொள்ளவும்.


Read more: http://www.livingextra.com/2011/02/blog-post_10.html#ixzz1GNfjxewN

Friday, September 24, 2010

VEERAVANALLUR

City Name     :  Viravanallur

Pincode         : 627426
Taluk             : Ambasamudram
District           : Tirunelveli
State               : Tamil Nadu

Higher Secondary Schools


Bharathiar Govt. Hr. Sec. School,      St. Johns Hr. Sec. School

Middle Schools


R.C. Middle School, Thirungana sambathar Middle School, Panchayat Union Middle School, Indira school, Sarada Vidyalayam
 TemplesBhoominatha Swamy Temple, one of the oldest temples in Tamilnadu, and Kadayamman Temple along with green view of Paddy field and Cannadian canal enriches beauty of Veeravanallur. There is a Church inside the R C Middle school, is quite famous and one of the old church in the District."Vandimalaichi amman Temple" is one of the famous temple situated in here.


NEAR TOURIES SPOT
Papanasam (Papa - Vinasam)


Location & Travel
Papanasam is a small village located at a distance of 20 Kms from Tirunelveli. There are lots of city buses run to this holy place. The climate here is very pleasant. This place is a boon to people who are crowded in the city life.

Importance

Papanasam is called the Kasi of South India.

The river Thamiraparani flowing from the Western Ghats reaches the plains at Papanasam. While flowing down the rocky bed it forms into many falls. The Agasthiyar falls being the popular one.

 

This waterfall is believed to absolve all sins from people who bathe in it. This has made Papanasam (papa+vinasam, meaning absolution of sins) an important pilgrim centre. Fishes are found in abundance in the water. They are quite harmless and approach the bathers in large numbers. The devotees believe that these fishes are redeemed souls and harming them would bring retribution.
The Papanasar Temple here is famous for it failth. People believe that taking bath at the falls and then worshiping the Lord Shiva here, will remove all their sins. It is one of the most important temples in Tirunelveli. Most of the marriages in and around Papanasam are held at this temple. 
________________________________________________________________________________________

Manjolai - Hill Station



Manjolai is 57 km away from Tirunelveli and is at an elevation of 1162 sq. metre. There are many tea plantations in and around this place. Bombay Burma Tea estate is famous one in this area. About 4000 people are working in these tea plantations. Manjolai is noteworthy for the climate, scenery and calm atmosphere.


BANK

IOB      BANK CODE  :  1400      BANK PHONE  NO:  287249

Thursday, September 23, 2010

Saturday, September 4, 2010

FROM - COMPUTER MALAR SOME IMPORTANT MESSAGE

கம்ப்யூட்டர் பயன்படுத்துவதில், நீங்கள் பெரிய வல்லுநரோ அல்லது புதியவரோ, முக்கிய விஷயங்கள் சிலவற்றை நாம் அனைவருமே அறிந்து கொள்ள வேண்டும். அவற்றில் சிலவற்றை இங்கு பார்ப்போம்.


1. இரண்டு கிளிக்: விண்டோஸ் சிஸ்டத்தில் இருமுறை கிளிக் செய்வது, பைல் ஒன்றைத் திறப்பதற்காக. ஆனால் இதனையே, இணைய தளம் ஒன்றில், இன்னொரு தளத்திற்கான லிங்க் தொடர்பின் மேல் கிளிக் செய்வதற்கோ, டயலாக் பாக்ஸில் கிளிக் செய்வதற்கோ பயன்படுத்தக் கூடாது. இதனால் தளம் இரண்டு டேப்களில் திறக்கப்படும்; அல்லது உங்களுடைய ஆப்ஷன் இரண்டு முறை அனுப்பப்படும். சிலர், படிவங்களில் தகவல்களை நிரப்பிவிட்டு, இறுதியில் அதனை அனுப்பும் Submit பட்டனில் இரண்டு முறை கிளிக் செய்வார்கள். இது இரண்டு விண்ணப்பங்களை அனுப்பிவிடும். எனவே எந்த இடத்தில் இரண்டு முறை கிளிக் செய்திட வேண்டுமோ, அங்கு மட்டுமே இருமுறை கிளிக் செய்திட வேண்டும்.

2.சரியான சாய்வுக் கோடு (Slashbackward and forward): கம்ப்யூட்டர் குறியீடுகளில் முன் மற்றும் பின் சாய்வுக் கோடு முக்கிய செயல்பாடுகளைக் கொண்டுள்ளது. இவற்றை மாற்றிப் பயன்படுத்துவது, விரும்பும் செயல் பாட்டி னைத் தராது. \ என்பது பின் சாய்வுக் கோடு (backward). /என்பது முன் சாய்வுக் கோடு (forward). விண்டோஸ் இயக்கத்தில் உள்ள கோப்புகள் உள்ள இடங்களைச் சுட்டிக் காட்டி வழிகளை அமைக்கையில் பின் சாய்வுக் கோடுகள் பயன்படுத்தப்படுகின்றன. எ.கா. C:\Program Files\Whatever . . இணைய முகவரிகளில் முன் சாய்வுக் கோடுகள் அமைக்கப்படுகின்றன. எ.கா.http://www.dinamalar.com

3. பிழைச் செய்தி பதிவு: சிஸ்டம் இயங்குகையில் பல வேளைகளில் பிழைச் செய்திகள் காட்டப்பட்டு, இயக்கம் முடங்கிப் போகும். இந்த பிழைச் செய்திகளை அலட்சியப்படுத்தாமல் அவற்றை எப்படியாவது குறித்து வைக்க வேண்டும். அதனை செலக்ட் செய்து டெக்ஸ்ட் பைல் ஒன்றில் ஒட்டி வைக்கலாம். தேர்ந்தெடுக்க இயலாவிட்டால், அப்படியே இமேஜ் பைலாக சேவ் செய்து, பின்னர் அதனைப் பார்த்து மெசேஜ் என்னவென்று டைப் செய்து வைக்கலாம். இந்த பிழைக்கான தீர்வு காண முயற்சிக்கையில், சாப்ட்வேர் நிறுவனத்திற்கு இதனை அனுப்பிக் கேட்கலாம். அல்லது கூகுள் தேடலில் இதனை பேஸ்ட் செய்தால், இது போல பிரச்னை ஏற்பட்டவர்கள், அப்போது என்ன செய்தார்கள் என்ற விளக்கத்தினைப் பெறலாம்.

4. அழிந்த பைல் மீட்பு: கோப்பு ஒன்றை, கம்ப்யூட்டரில் இருந்து அழிக்கும் போது, அது அப்படியே அழிக்கப்படுவதில்லை. இந்த பைல் இங்கிருக்கிறது என்று கம்ப்யூட்டரின் சிபியுவிற்குச் சொல்லப்படும் இன்டெக்ஸ் குறியீடுதான் அழிக்கப்படுகிறது. இது அந்த பைல் இருக்கும் ஹார்ட் டிஸ்க் இடத்தைப் பின்னர் வேண்டும்போது மற்ற பைல்களுக்குப் பயன்படுத்தலாம் என்ற செய்தியைக் கம்ப்யூட்டருக்குத் தருகிறது. எனவே நாம் விரும்பாமல் ஏதேனும் பைல் ஒன்றை, ரீசைக்கிள் பின்னிலிருந்தும் எடுக்க முடியாத நிலையில் அழித்துவிட்டால், ஹார்ட் டிஸ்க்கிலிருந்து அதனைப் பெறலாம். இதற்கு ரெகுவா (Recuva)போன்ற பைல் மீட்கும் புரோகிராம்களைப் பயன்படுத்தவும்.

5. ஹார்ட் டிஸ்க்கை முழுமையாக அழிக்க: பயன்படுத்திய கம்ப்யூட்டரை மற்றவருக்குக் கொடுக்கிறீர்கள். அல்லது விற்கிறீர்கள். அப்போது ஹார்ட் டிஸ்க்கினை எடுத்து வைத்துக் கொள்வது நல்லது. பைல்களை அழித்துவிட்டுக் கொடுப்பதாக இருந்தால், முழுமையாக அவற்றை அழிக்க வேண்டும். ஏனென்றால், இதனைப் பெறும் மற்றவர்கள், அழிந்த பைல் மீட்டுத் தரும் புரோகிராம்கள் மூலம் உங்களின் பெர்சனல் தகவல்களைப் பெற்றுவிடும் வாய்ப்புகள் உள்ளன.

6. தேவையற்ற இன்ஸ்டால் : ஏதேனும் பயன்பாட்டு சாப்ட்வேர் புரோகிராம்களை உங்கள் கம்ப்யூட்டரில் பதியும்போது, அது தரும் கூடுதல் வசதிகளை இன்ஸ்டால் செய்திட வேண்டாம். பின்னர் எப்போது வேண்டுமானாலும், அந்த புரோகிராம் தரும் தளம் சென்று, பதிந்து கொள்ளலாம். ஏனென்றால், கூடுதல் வசதிகள் ஒவ்வொரு முறையும் புரோகிராமுடன் இயங்கத் தொடங்குகையில், அவை தொடங்க அதிக நேரம் எடுப்பதுடன், கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க்கில், ராம் மெமரியில் அதிக இடம் எடுக்கும். எனவே அப்ளிகேஷன் சாப்ட்வேர் ஒன்றை பதிந்து கொள்கையில், கூடுதல் வசதிக்கான செக் பாக்ஸ் மற்றும் ரேடியோ பட்டன்கள் தேர்ந்தெடுக்கப் பட்டிருந்தால், அவற்றை நீக்கி இன்ஸ்டால் செய்திடவும்.

7. கிளீனர்களை நம்ப வேண்டாம்: நாம் நம்பிக்கை வைத்திருக்கும் தளங்கள் சிலவற்றில், உங்கள் கம்ப்யூட்டரை சுத்தப்படுத்த, இந்த இடத்தில் கிளிக் செய்திடுங்கள் என சில லிங்க்குகள் இருக்கும். ரெஜிஸ்ட்ரியைச் சரி செய்திடலாமே! ஸ்பைவேர்களை எடுக்கவா, இலவசமாய்! என்று சில லிங்க்குகள் இருக்கும். பெரும்பாலான இந்த லிங்க்குகள் நமக்கு உதவி செய்வதைக் காட்டிலும், உபத்திரவம் தருவதாகவே அமையும். இக்கட்டில் மாட்டிவிட்டு, பணம் கட்டு என்று சொல்லும் தளங்களும் உள்ளன. எனவே இவற்றைப் பயன்படுத்துவதனை அறவே தவிர்க்கவும்.

8. தேவையற்றவற்றை நீக்குக: மிகவும் ஆசையாக சில அப்ளிகேஷன் சாப்ட்வேர்களைப் பதிந்து பயன்படுத்தி இருப்பீர்கள். காலப் போக்கில் அதன் மேம்படுத்தப் பட்ட அல்லது கூடுதல் வசதிகளுடன் கூடிய சில சாப்ட்வேர்களையும் இன்ஸ்டால் செய்திருப்பீர்கள். இந்நிலையில், பழைய சாப்ட்வேர்களை, கம்ப்யூட்டரிலிருந்து நீக்குவதே நல்லது. கண்ட்ரோல் பேனல் சென்று, Add/Remove Programs பிரிவின் மூலம் பழையனவற்றை நீக்கிவிடுங்கள்.

9: சிந்திய திரவம்: லேப்டாப் பயன்படுத்துபவர்கள் பலர் இந்த நெருக்கடிக்கு ஆளாவார்கள். லேப்டாப் பயன்படுத்திக் கொண்டே தண்ணீர், காபி, டீ என பானங்களைச் சாப்பிடுவார்கள். அப்படியே சில வேளைகளில் கவனமின்றி லேப்டாப் கம்ப்யூட்டர்களில் இது சிதறிவிடும். உடனே அதனை இணைத்திருக்கும் பவர் ப்ளக்கை நீக்கவும். பவர் ப்ளக்கில் இல்லை என்றால், கம்ப்யூட்டர் உள்ளே இருக்கும் பேட்டரியை நீக்க வேண்டும். இதனுடன் இணைக்கப்பட்டிருக்கும் அனைத்து சாதனங்களையும், வெப் கேமரா, யு.எஸ்.பி. போர்ட்டில் உள்ள ட்ரைவ் போன்றவை, நீக்க வேண்டும். உடனே லேப்டாப்பினைத் தலைகீழாக கவிழ்த்து அந்த திரவத்தினை வெளியே கொண்டு வரும் முயற்சியில் இறங்க வேண்டாம். நல்ல உறிஞ்சும் தன்மையுடைய துணி கொண்டு, ஒற்றி எடுக்க முயற்சிக்கலாம். லேப்டாப்பினை வெவ்வேறு திசைகளில் அசைப்பதன் மூலம், மேலே உள்ள திரவம் இன்னும் உள்ளே போகும் வழியை அமைக்கிறீர்கள்.

10. அட்மின் அக்கவுண்ட்: பெரும்பாலான எக்ஸ்பி சிஸ்டம் பயனாளர்கள், அவர்களின் அட்மினிஸ்ட் ரேட்டர் அக்கவுண்ட்டிலேயே, தொடர்ந்து கம்ப்யூட்டரில் பணிபுரிவார்கள். கம்ப்யூட்டர்களில் மாற்றங்கள் ஏற்படுத்த, இந்த அக்கவுண்ட் வழி செல்ல வேண்டும் என்றாலும், மற்ற நேரங்களில் வேறு ஒரு அக்கவுண்ட் வழி சென்று பயன்படுத்தலாம். ஏனென்றால், அட்மின் அக்கவுண்ட் வைரஸ்களை எளிதில் உள்ளே வரவழைக்கும்.

11. சிஸ்டம் ட்ரே கிளீன்: உங்களுடைய டாஸ்க்பாரின் வலது பக்கம் சிஸ்டம் ட்ரேயில் பல ஐகான்கள் உள்ளனவா? இவை எல்லாம் உங்களைக் கேட்காமலேயே இயங்கிய புரோகிராம்களின் தடங்கள். இவை எல்லாம் கம்ப்யூட்டர் இயங்கத் தொடங்குகையில், நீங்கள் அறிந்தோ அறியாமலோ இயக்கப்பட்டுப் பின்னணியில் இருக்கும். இங்கிருக்கும் புரோகிராம்கள் தேவையா என சிறிய கால இடைவெளியில் பார்த்துத் தேவைப்படாதவற்றை நீக்கவும். கண்ட்ரோல் பேனலில் Notification Area Icons என்ற பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். இதில் கீழாகவுள்ள Always show all icons and notifications on the taskbar என்ற பிரிவில் செக் பாக்ஸில் உள்ள டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும். இதன் மூலம் உங்கள் சிஸ்டம் ட்ரே எவ்வளவு கூட்டமாக இருக்கிறது என்று தெரியவரும். இதில் தேவைப்படாத ஐகான் மீது ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில் Close என்ற பிரிவில் கிளிக் செய்திடவும். அந்த குறிப்பிட்ட புரோகிராம், இயக்கத்தில் இருந்து நீக்கப்படும். உங்கள் கம்ப்யூட்டரின் ராம் மெமரி இதற்காக உங்களுக்கு நன்றி சொல்லும்.

12. மின் சிக்கனம்: லேப்டாப் பயன்படுத்துபவராக இருந்தால், உங்கள் பேட்டரியின் திறனைச் சற்று சிக்கனமாகப் பயன்படுத்தலாமே. இதற்கான Power Settings அமைப்பில் சில மாற்றங்களை ஏற்படுத்துங்கள். கண்ட்ரோல் பேனலில்Power Options என்ற பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். இதில் பல ஆப்ஷன்கள் தரப்பட்டிருப்பதனைக் காணலாம். உங்கள் லேப்டாப் பயன்பாட்டிற்கேற்ப, இதில் விருப்பங்களைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தவும்.
 
 
- DINAMALAR

Wednesday, September 1, 2010

எந்த வகை கீபோர்ட்-லும் மின்னல் வேக தட்டச்சு செய்ய புதிய வழி முறை.

தினமும் புதிது புதிதாக வரும் தட்டச்சு பலகையிலும் நாம்

திறமையான முறையில் வேகமாக தட்டச்சு செய்வது எப்படி

என்பதைப் பற்றித்தான் இந்தப்பதிவு.



டெஸ்க்டாப் கணினியில் மட்டும் அல்ல மடிக்கணினியிலும் நாம்

மின்னல் வேகத்தில் தட்டச்சு செய்யலாம், எந்த தட்டச்சு வகுப்பு

செல்ல வேண்டியதில்லை,எந்த பணச்செலவும் இல்லாமல் நம்

நேரத்தை மட்டுமே செலவு செய்து எளிதாக இருக்கும் இடத்தில்

இருந்து தட்டச்சு பலகலாம். கணினி வல்லுனர்களில் பலபேர்

தட்டச்சு செய்வதற்கு சில மணி நேரம் செலவளிக்கின்றனர்

இந்த நேரத்தை மிச்சப்படுத்துவதற்காகவும் நம் தட்டச்சு வேகத்தை

அதிகப்படுத்துவதற்காகவும் ஒரு இணையதளம் உள்ளது.

இணையதள முகவரி : http://www.typinglessons-online.com/EN/

இந்தத்தளத்திற்கு சென்று நாம் எந்த வகை விசைப்பலகை

பயன்படுத்துகிறோம் என்பதை தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டியது

தான் அடுத்து அவர்கள் சில வகை பயிற்சிகள் கொடுக்கின்றனர்

எளிதாகவும் புதுமையாகவும் இருக்கிறது. அவர்கள் கொடுக்கும்

எழுத்துக்களை நாம் தட்டச்சு செய்யவேண்டும் அதில் எத்தனை

சரி என்று உடனுக்கூடனே காட்டிவிடுகின்றனர்.தட்டச்சு பலகையின்

படமும் திரையில் தெரிகிறது. தினமும் சில மணி நேரம் செலவு

செய்தால் கண்டிப்பாக நாமும் மின்னல் வேகத்தில் தட்டச்சு

செய்யலாம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, கண்டிப்பாக இந்தப்

பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்